ஐங்குறுநூறு - 23. அம்மவழிப் பத்து.
அம்ம வாழி தோழி நம்மலை நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன் கொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின் வன்புடை விறற்கவின் கொண்ட வன்பி லாளன் வந்தனன் இனியே. | 226 |
அம்ம வாழி தோழி நாளும் நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும் ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி நப்பிரிந்து உறைதோர் மன்றநீ விட்டனை யோஅவர் உற்ற சூளே. | 227 |
அம்ம வாழி தோழி நம்மூர் நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன் இரந்துகுறை யுறாஅன் பெயரின் என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே. | 228 |
அம்ம வாழி தோழி நாம்அழப் பன்னாள் பிரிந்த அறனி லாளன் வந்தன னோமற்று இரவில் பொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே. | 229 |
அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின் மெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் தொலைத்த குன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே. | 230 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 23. அம்மவழிப் பத்து., தோழி, வாழி, அம்ம, இலக்கியங்கள், பத்து, அம்மவழிப், ஐங்குறுநூறு, நெகிழவும், பொன்போல், லாளன், விறற்கவின், சங்க, எட்டுத்தொகை