ஐங்குறுநூறு - 23. அம்மவழிப் பத்து.
அம்ம வாழி தோழி கதலர் பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய நன்மா மேனி பசப்பச் செல்வல் என்பதம் மலைகெழு நாடே. | 221 |
அம்ம வாழி தோழி நம்மூர் நனிந்துவந்து உறையும் நறுந்தண் மார்வன் இன் இனி வாரா மாறுகொல் சின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே. | 222 |
அம்ம வாழி தோழி நம்மலை வரையாம் இழியக் கோடல் நீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும் தண்பனி வடந்தை அச்சிரம் முந்துவந்த் தனர்நம் காத லோரே. | 223 |
அம்ம வாழி தோழி நம்மலை மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில் துணீநீர் அருவி நம்மோடு ஆடல் எளிய மன்ஆல் அவர்க்கினி அரிய ஆகுதல் மருண்டனென் யானே. | 224 |
அம்ம வாழி தோழி பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனிமலர்க் குவளை உள்ளகங் கமழும் கூந்தல் மெல்லியல் ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல் ஓரார் கொல்நம் காத லோரே. | 225 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 23. அம்மவழிப் பத்து., வாழி, தோழி, அம்ம, இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, அம்மவழிப், லோரே, நம்மலை, எட்டுத்தொகை, சங்க