ஐங்குறுநூறு - 14. பாணற்கு உரைத்த பத்து
நண்றே பாண கொண்கனது நட்பே தில்லை வேலி இவ்வூர்க் கல்லென் கௌவை எழாஅக் காலே. | 131 |
அம்ம வாழி பாண புன்னை அரும்புமலி கானல் இவ்வூர் அலரா கின்றுஅவர் அருளு மாறே. | 132 |
யானெவன் செய்கோ பாண ஆனாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் புல்லென் றனஎன் புரிவளைத் தோளே. | 133 |
காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி நெடுந்தேர்க் கொண்க னோடு தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே. | 134 |
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள் ஐதுஅமைந்து அகன்ற அல்குல் நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே. | 135 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 14. பாணற்கு உரைத்த பத்து, இலக்கியங்கள், பாணற்கு, ஐங்குறுநூறு, பத்து, உரைத்த, எட்டுத்தொகை, சங்க