ஐங்குறுநூறு - 14. பாணற்கு உரைத்த பத்து
நாணிலை மன்ற பாண நீயே கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த கானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே. | 136 |
நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த் திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர் பண்டைத் தந்நலம் பெறுபவோ. | 137 |
பண்பிலை மன்ற பாண இவ்வூர் அன்பில கடிய கழறி மென்புலக் கொண்கனைத் தாரா தோயே. | 138 |
அம்ம வாழி கொண்க எம்வயின் மாண்நலம் மருட்டும் நின்னினும் பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே. | 139 |
காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை துறைகெழு கொண்கன் பிரிந்தென விறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே. | 140 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 14. பாணற்கு உரைத்த பத்து, இலக்கியங்கள், பாணற்கு, ஐங்குறுநூறு, உரைத்த, பத்து, மன்ற, சங்க, எட்டுத்தொகை