ஐங்குறுநூறு - 11. தாய்க்கு உரைத்த பத்து.
அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத் துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும் தன்கடல் வளையினும் இலங்கும்இவள் அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. | 106 |
அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து தண்கடல் படுதிரை கேட்டொறும் துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. | 107 |
அன்னை வாழிவேண் டன்னை கழிய முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன் எந்தோள் துறந்தனன் ஆயின் எவன்கொல் மற்றவன் நயந்த தோளே. | 108 |
அன்னை வாழிவேண் டன்னை நெய்தல் நீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் எந்தோள் துறந்த காலை எவன்கொல் பன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே. | 109 |
அன்னை வாழிவேண் டன்னை புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை என்னை என்றும் யாமே இவ்வூர் பிறதொன் றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே. | 110 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 11. தாய்க்கு உரைத்த பத்து. , அன்னை, வாழிவேண், டன்னை, இலக்கியங்கள், உரைத்த, ஐங்குறுநூறு, பத்து, தாய்க்கு, பூக்கெழு, எவன்கொல், சங்க, எட்டுத்தொகை, எந்தோள்