ஐங்குறுநூறு - 11. தாய்க்கு உரைத்த பத்து.
அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண் ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள் பூப்போல் உண்கண் மரீஇய நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே. | 101 |
அன்னை வாழிவேண் டன்னை நம்மூர் நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது துன்புறு துயரம் நீங்க இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே. | 102 |
அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன் இவட்குஅமைந் தனெனால் தானே தனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே. | 103 |
அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப் பலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய் நள்ளென வந்த இயல்தேர்ச் செல்வக் கொண்கன் செல்வன தூரே. | 104 |
அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல் திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும் தணம் த்றவன் வந்தெனப் பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே. | 105 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 11. தாய்க்கு உரைத்த பத்து. , டன்னை, அன்னை, வாழிவேண், இலக்கியங்கள், தாய்க்கு, ஐங்குறுநூறு, உரைத்த, பத்து, கொண்கன், சங்க, எட்டுத்தொகை