ஐங்குறுநூறு - 12. தோழிக்கு உரைத்த பத்து.
அம்ம வாழி தோழி பாணன் சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே. | 111 |
அம்ம வாழி தோழி பாசிலைச் செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன் தான்வரக் காண்குவம் நாமே மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே. | 112 |
அம்ம வாழி தோழி நென்னல் ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டென மொழிய என்னை அதுகேட் டன்னாய் என்றனள் அன்னை பைபய வெம்மை என்றனென் யானே. | 113 |
அம்ம வாழி தோழி கொண்கன் நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ கடலின் நாரை இரற்றும் மடலம் பெண்ணை அவனுடை நாட்டே. | 114 |
அம்ம வாழி தோழி பன்மாண் நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய தண்ணந் துறைவன் மறைஇ அன்னை அருங்கடி வந்துநின் றோனே. | 115 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 12. தோழிக்கு உரைத்த பத்து. , வாழி, தோழி, அம்ம, இலக்கியங்கள், உரைத்த, ஐங்குறுநூறு, பத்து, தோழிக்கு, அன்னை, நாமே, சங்க, எட்டுத்தொகை, துறைவன்