ஐங்குறுநூறு - 10. எருமைப் பத்து
அணிநடை எருமை ஆடிய அள்ளல் மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும் கழனி ஊரன் மகளிவள் பழன் ஊரன் பாயல்இன் துணையே. | 96 |
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை ஊரன் மகளிவள் பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே. | 97 |
தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர ஒண்டொடி மடமகள் இவளினும் நுந்தையும் யாயும் துடியரோ நின்னே. | 98 |
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி யெருமை கதிரொடு மயக்கும் பூக்கஞல் ஊரன் மகளிவள் நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே. | 99 |
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகளிவள் பாணர் நரம்பினும் இன்கிள வியளே. | 100 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 10. எருமைப் பத்து, ஊரன், இலக்கியங்கள், மகளிவள், எருமை, பத்து, எருமைப், ஐங்குறுநூறு, சங்க, எட்டுத்தொகை, கழனி