கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்
12.கோவலன் திட்டம்
நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச் சிலம்புள கொண்மெனச் சேயிழை கேளிச் சிலம்பு முதலாகச் சென்ற கலனோ டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர் |
75 |
மாட மதுரை யகத்துச்சென் றென்னோடிங் கேடலர் கோதா யெழுகென்று நீடி வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற் கனைசுடர் கால்சீயா முன். |
அழகிய ஒளிபொருந்திய தன் முகத்தில்,சின்ன புன்முறுவலோடு,’இன்னும் என் சிலம்புகள் உள்ளன,அவற்றைப் வைத்துக் கொள்ளுங்கள்’ எனக் கோவலனிடம் கூறினாள் கண்ணகி.
இதைக் கேட்ட கோவலன்,’பெண்ணே! நான் சொல்வதைக் கேள்,இந்தச் சிலம்பினை முதலாக வைத்து வியாபாரம் செய்து,இதற்கு முன் நான் இழந்த நகைகளையும்,தொலைத்த பொருளையும் ஈட்ட முடிவு செய்துள்ளேன்.அதன் பொருட்டு நாம் பெரும் புகழுடைய மாடங்கள் நிறைந்த மதுரைக்குச் செல்ல வேண்டும்.இதழ்விரிந்த மலர்மாலை அணிந்தவளே!நீயும் என்னுடன் இங்கிருந்து புறப்படுவாயாக!’,என்றான்.
முற்பிறவியில் செய்த தீவினை வந்து நெஞ்சைத் தூண்டிவிட,அவ்வினையின் ஆணைப்படி மறுநாள் காலைக் கதிரவனின் பேரொளி,இரவின் இருளை ஓட்டும் முன்பே அவ்விருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]