கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

9. கனாத்திறம் உரைத்த காதை
(கலி வெண்பா)
கண்ணகி ஒரு தீய கனவுக் கண்டு அதைத் தன் தோழியிடம் உரைக்கிறாள்.கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்கிறான்.சேர்ந்த இருவரும் புகாரை விட்டு வெளியேறி,மதுரைநோக்கிப் பயணிக்கிறனர்.
1.மகளிரின் மாலை வழிபாடு
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர் கோலங் கொடியிடையார் தாங்கொள்ள |
பகல் முடிந்து மாலைப்பொழுது தொடங்கும் நேரத்திலே,புகார் நகரப் பெண்கள் அகன்ற தன் வீடுகள் அனைத்திலும் அரும்பு அவிழ்ந்த ஒளிமிக்க முல்லை மலர்களை நெல்லுடன் தூவி,அழகிய மணிவிளக்குகளை ஏற்றினர்.இரவுப் பொழுதிற்கு ஏற்ற ஆடை அணிகலன்களையும் அந்தக் கொடியிடையுடைய மகளிர் அணிந்து கொண்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]