கானல் வரி - சிலப்பதிகாரம்
4.பாங்கன் கூற்று
(கோவலன் பாடும் இப்பாடல்,’குறியிடத்துச் சென்ற பாங்கன், தலைவியின் காதல் மிகுதியைக் குறிப்பினால் அறிந்து கூறுதல்’ போல அமைந்துள்ளது.)
வேறு
(முகம் இல் வரி)
(முகம் இல் வரி)
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத |
8 |
கடற்கரை மணலில் மேய்கின்ற வலம்புரிச் சங்குகள்,அந்த மணலிலே தோய்த்து உழுவதால்,மணலில் வடுக்களாகச் சிறு குழிகள் தோன்றின.கடற்ரை சோலையிலுள்ள அழகிய புன்னை மரம்,பூத்து குலுங்கும் தன் அடர்ந்த பூக்களின் பாரம் தாங்காது அவற்றை உதிர்த்தன.உதிர்ந்த அந்தப் பூக்களின் நுண்ணியப் பூந்தாதுக்கள்,மணலில் தோன்றிய வடுக்களை மூடி மறைக்கும்.அத்தகைய கானல் நிலத்தில்,தலைவியின் முழுமதி போன்ற ஒளி வீசும் முகத்தில் இருக்கும் கயல் போன்ற கண்களால் வந்த காதல் என்னும் காம நோயினைப் போக்க,எந்த மருந்தாலும் முடியாது.மருந்தால் தீர்க்க முடியாத நோயை குணபடுத்தும் சக்தி,தேமல் படர்ந்த அவள் மென்மையான மார்புகளுக்கு மட்டும் உண்டு போல!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]