கானல் வரி - சிலப்பதிகாரம்

13.ஆம்பல் மலர்ந்தது!
(அன்னத்தையும் பூக்களையும் கண்டு ஆம்பல் மலர்ந்தது போல,உன் பொய்யான சொற்களைக் கேட்டு என் தலைவி இணங்கினாள் என்று தோழி தலைவனுக்கு உணர்த்துவது போல அமைந்துள்ளது இப்பாடல்.)
வேறு
(சார்த்து வரி)
(சார்த்து வரி)
| மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து |
29 |
ஆற்றல்மிக்கப் பரதவர் வாழும் பாக்கத்தில்,களவில் கூடிய மகளிர்,தலைவனைப் பிரிந்தத் துயரால்,அவர்களின் சிவந்த முன்கையில் இருந்து வளையல்கள் தானே கழன்று விழுந்து பழிப்பதை,ஏழைகளாகிய நாம் எங்ஙனம் அறிவோம்?ஐயனே ! அன்னமொன்று அரும்பிய பூக்களின் சுமையால் பாரம் அதிகரித்த நீண்ட புன்னைமரத்தின் கிளையில் ஏறியிருக்க,அந்த அன்னத்தை முழுநிலவு என்றும்,பூக்களை நட்சத்திரங்கள் என்றும் எண்ணி,ஆம்பல் மலர் பகலிலேயே மலர்ந்தது.அவ்வாம்பல் மலரை வண்டுகள் ஊதி நிற்கும் புகார் அல்லவா எனது ஊர்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]