கானல் வரி - சிலப்பதிகாரம்

10.கட்டுரை
(மாதவி,கோவலன் பாடிய பாடல்களைக் கேட்டுக் காதலால் மகிழ்ந்தவள்போல நடித்து,அவனிடமிருந்த யாழை வாங்கி,கோபத்துடன் கானல் வரி பாடத் தொடங்குகிறாள்.)
(கட்டுரை)
ஆங்குக், கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும் மன்னுமோர் குறிப்புண்டிவன் றன்னிலை மயங்கினானெனக் கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ்வாங்கித் தானுமோர் குறிப்பினள்போற் கானல்வரிப் பாடற்பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த நீள்நிலத்தோர் மனமகிழக் கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்குமன். |
24 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]