இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்
9.மங்கல நெடுங்கொடி
(இந்திரவிழா பற்றி முரசறைந்து அறிவித்து,மங்கல நெடுங்கொடி ஏற்றினர்)
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசங் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து |
145 |
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து |
வச்சிரக் கோட்டத்திலிருக்கும் நறுமணம் கமழும் முரசை,கச்சை முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்ட களிற்றியானையின் பிடரியின் மேல் ஏற்றினர்.தூய வெள்ளை நிறமுடைய யானையான அயிராவதம் நின்றக் கோயிலுக்குச் சென்று,விழா தொடக்கம் முடிவு பற்றிய விவரங்களை முரசறைந்து நகருக்கு அறிவித்தனர்.மக்களுக்கு வாழ்வளிக்கும்படி இந்திரன் வந்து தங்கிய கற்பகத்தரு நின்ற கோட்டம் சென்று,அயிராவதம் எழுதிய மங்கல நெடுங்கொடியை வானளாவப் பறக்குமாறு ஏற்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]