இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

7.வடபுலத்தார் வழகியவை
(வடபுலத்தார் தந்தவற்றைக் கொண்டு சித்திர மண்டபமாகப் பொருத்தினான் சோழன்)
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் |
100 |
மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும் பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் |
105 |
நுண்வினைக் கம்மியர் காணா மரபின துயர்தீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும் அரும்பெறன் மரபின் மண்டப மன்றியும் |
110 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]