இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

5.வீரர்கள் பலியிடல்
(தம் வேந்தன் நலம்பெற வேண்டி,வீரர்கள் தம் தலையை வெட்டி பலிக் கொடுத்தனர்)
மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குரவம் பாகெனக் |
80 |
கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற் பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென |
85 |
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங் குயிர்ப்பலி யுண்ணு முருமுக்குரன் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]