இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

4.நாளங்காடி
(இந்திர விழா தொடக்கத்தில்,நாளங்காடியில் பூத வழிபாடு நடந்தது)
இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியி னிடைநில மாகிய |
60 |
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போ ரோதையுங் கொள்வோ ரோதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேன் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் |
65 |
தேவர் கோமா னேவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப் |
70 |
பெருநில மன்ன னிருநில மடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும் மூதிற் பெண்டி ரோதையிற் பெயர |
75 |
இருபெரு வேந்தர்களின் போர்முனைகளுக்கும் இடைப்பட்டுக் கிடக்கும் இடைநிலம் போல,மருவூர்பாக்கம் பட்டினப்பாக்கம் என்னும் இருவேறு பகுதிகளுக்கும் இடைநிலமாக இருந்தது நாளங்காடி.நெருக்கமாய் நெருங்கி வளர்ந்த சோலை மரங்களையே தூங்களாகக் கொண்டு கட்டப்பட்ட கடைகள் இருந்தன.அங்கு பண்டங்களை விற்போர் வாங்குவோரின் குரல்கள் இடையறாது ஒலித்துக்கொண்டேயிருந்தது..’வெற்றி வேலையுடையவனான முசுகுந்த மன்னனுக்கு உற்ற உயிரை ஒழிப்பாய்’ என இந்திரன் ஏவிய ஏவலின்படி முன்னர் வந்து சேர்ந்த காவற்பூதத்துக் கோவிலும் இருந்தது.சித்திரை மாதத்தில்,சித்திரை நட்சத்திரத்துப் பெளர்ணமியும் சேர்ந்து வருகின்ற சித்ரா பெளர்ணமி நாளிலே,அந்த கோயிலின் வாயிலில் அமைந்த பலிபீடத்தில்,துவரை புழுங்கிய பண்டங்கள்,எள்ளுருண்டை,கறிச்சோறு,பூ,நறும்புகை,பொங்கல் ஆகிவற்றைப் படைத்து,மறக்குடி மகளிர் வழிபட்டனர்.பின் தெய்வம் ஏறி துணங்கைக் கூத்தும் குரவைக் கூத்தும் ஆடி மகிழ்ந்து,’எம் பெருநில மன்னன் காக்கும் இருநிலம் முழுவதும் பசியும்,பிணியும்,பகையும் நீங்கி,மழையும் வளமும் சுரக்க’,என வாழ்த்துப் பாடியே அழகிய கோலம்பூண்ட மறக்குல மகளிர் வல்லமையுடன் ஆரவாரத்துடன் விழா கொண்டாடினர்.
நாளங்காடிப் பூத வழிபாடு
சோழ மன்னன் முசுகுந்தன்,தேவாகர போரில் தேவர்கள் பக்கம் நின்று போரிட்டு வெற்றிக் கண்டான்.இதற்க்குப் பரிசாக இந்திரன் புகார் நகரையும் மன்னனையும் காப்பதற்கு வலிமைமிக்க பூதமொன்றை பரிசளித்தான்.அப்பூதம் காவேரிப்பட்டினம் நாளங்காடியில் தங்கி நின்று காவல் புரிந்தது.இந்திர விழாவின் தொடக்கத்தில் புகார் மக்கள்,அப்பூததுக்குப் பலியிட்டு வணங்கி வருவது மரபு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]