இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

17.கண்கள் துடித்தன!
(கண்ணகியின் இடக்கண் துடித்தது!மாதவியின் வலக்கண் துடித்தது!)
உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து | 235 |
கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென். |
240 |
இதற்குப் பின்,கண்ணகி கோவலுடன் இணையப் போகும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது!மாதவி கோவலனைப் பிரியப் போகும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது!
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]