இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

11.இந்திரனை நீராட்டினர்
(வானவர் தலைவனான இந்திரனை நீராட்டினர்)
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் அரச குமரரும் பரத குமரரும் கவர்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்பரித் தேரினர் இயைந்தொருங் கீண்டி |
160 |
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும் ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் |
165 |
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணக மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டிப் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]