அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்

7.காதலரை பிரிந்த மாதர்
(காதலரை பிரிந்த மாதர் தூக்கமின்றித் தவித்தனர்.)
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக ஊதுலைக் குருகின் உயிர்த்தன ரொடுங்கி வேனிற் பள்ளி மேவாது கழிந்து |
60 |
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து மலையத்து ஆரமு மணிமுத் தாரமும் அலர்முலை யாகத்து அடையாது வருந்தத் தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர் வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத் |
65 |
துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த இணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது உடைப்பெருங் கொழுநரோ டூடற் காலத் திடைக்குமி ழெறிந்து கடைக்குழை யோட்டிக் கலங்கா வுள்ளங் கலங்கக் கடைசிவந்து |
70 |
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]