மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்
7.போற்றி புகழ்தல்
(கண்ணகியின் புகழை,கோவலன் போற்றி புகழும் காட்சி)
மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே |
75 |
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே யென்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா இசையே யென்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று |
80 |
குற்றமற்ற பொன்னே!வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்து போன்றவளே!குற்றமற்ற மணப்பொருள் தரும் தெய்வ மணமே!இனிமையான கரும்பை போன்றவளே!தேனினும் இனிமையுடையவளே!பெறுவதற்கு அருமையான பாவையே!இன்னுயிர் காக்கும் மருந்தே!பெருங்குடி வணிகனின் பெருமை வாய்ந்த மகளே!
நின்னை ,
‘மலையிடையிலே பிறவாத மணியே!’,என்று சொல்வேனோ?
‘அலையிடையே பிறவாத அமிழ்தமே!’,என்று சொல்வேனோ?
‘யாழிடையே பிறவாத இசையே!’,என்று சொல்வேனோ?
நீண்டு தாழ்ந்த கருங்கூந்தல் உடைய பெண்ணே!நின்னை நான் எவ்வாறு சொல்லித்தான் பாராட்டுவேனோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]