பாடல் 87 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா யின்னமொரு புதுமைகேளுபடவரவ சனிசெவ்வாய் வெய்யோனேழில்வாரப்பா வந்ததொரு தாரமெல்லாம்வையகத்தில் மாண்டிடுவர் வரிசையாகஆரப்பா அட்டமத்தி லிவர்கள் நிற்கஅப்பெண்ணின் கணவனோ முந்திசாவன்சீரப்பா போகருட கடாட்சத்தாலேசிறப்பாகப் புலிப்பாணி நூலைப்பாரே. |
இன்னொரு புதுமையான செய்தியினையும் நீ கேட்பாயாக! பட அரவும், சனியும், செவ்வாயும், சூரியனும் சேர்ந்து களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் அமர அச்சாதகனுக்கு வந்த தாரமெல்லாம் இப்பூமியிலே வரிசையாக மாண்டு போவார்கள். ஆனால் இவர்கள் அட்டமத்தில் அமர்ந்தார்களேயானால் அப்பெண்ணின் கணவனே (அதாவது சாதகன்) முன்னர் சாவான். இக்கருத்தையும் போகமுனிவரின் பேரருட் கருணையால் உனக்குச் சொன்னேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 87 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology