பாடல் 54 - புலிப்பாணி ஜோதிடம் 300
செப்புவாய் உபயத்தில் செனித்தபேர்க்கு |
உபயராசியில் ஜனித்த ஜாதகருக்கு சப்தம கேந்திராதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். அதனால் அவனியில் மிகுந்த அவதியுண்டாகும். ஊழ்வினைத் தடுக்கவல்லவர் உலகில் யாரே உளர்? (இல்லையன்றோ) கிடைக்கத் தக்க வருவாய் கிடைக்காமல் போதலும் தொழில் நாசமும், தன நாசமும், அரசர் பகையும் தேகத்தில் நோய் உபாதைகள் ஏற்படுதலும் நேரும். எனினும் கிரக நிலவரத்தை நன்கு ஆராய்ந்தறிந்து என் சற்குருவான போகர் அருளாணையாலே நான் கூறும் கருத்தினை திசாபுக்தி தெரிந்து கூறுவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 54 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், நாசமும், astrology