பாடல் 188 - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா குருபதியும் மூன்றிலேறக் |
வேறொன்றையும் கூறுகிறேன். கவனத்துடன் கேட்பாயாக! வேந்தன் எனப்படும் குருபகவான் கோட்சாரத்தில் மூன்றாமிடத்தை அடைந்தால் அவனால் மிகுந்த கேடுண்டாகும். இச்சாதகனின் மனையில் களவு போதலும் மற்றும் வெகுவான துர்ப்பலன்களூம் ஏற்படும். அவ்வளவு ஏன்? உலகமெல்லாம் ஆண்ட ஒரு வகையான குற்றமும் இல்லாத காந்தாரியின் மகனான துரியோதனன் பீமன் கை கதையாலே மடிந்து மலைபோல் சாய்ந்தவனே இதனையே உதாரணமாகக் கொள்க என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 188 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், களவு, astrology, வேந்தன்