தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'மாதொரு பாகம்' 'தாயுமாய் நாயுமானார்' நாடகங்கள் பெண்நிலை வாதத்தினைக் கருவாகக் கொண்டவை என்றே குறிப்பிடப்படுகின்றன.
"நாயெண்டால் பெட்டைக்கு மதிப்பில்லை... நாயிலும் அல்சேஷன் போல நல்ல இனம் என்றால் பெட்டைக்கு மதிப்பு, ஏனெண்டால் யாவாரம் பெருகும்" என்ற கருத்தினைப் பெண் சிசுகொலை, பரத்தமை இவற்றுடன் ஒப்பிட முடிகிறது.
"பெண்ணைப் பற்றிய கனகேள்வியளுக்கு மறுமொழி, இந்தச் சமூகத்தில் மட்டுமல்ல, வேறு சமூகத்தினாலும் கிடைக்குமோ தெரியேல்ல... பொம்பிளையள் இனியாவது குடும்பத்திலை, சமூகத்திலை உங்கடை உண்மையான நிலையை அறிஞ்சு கொள்ள முயற்சி செய்யுங்கோ" என்று அப்பட்டமான பிரச்சாரம் செய்கிறார் குழந்தை ம. சண்முகலிங்கம்.
மகாகவியின் 'ஒரு புதிய வீடு' குடும்ப நிறுவன மரபில் பெண்ணுக்கு ஏற்படும் சிக்கலை மையமிட்டதாக அமைகிறது. இறந்ததாக நம்பப்பட்ட கணவன் திரும்பும்பொழுது, இரண்டாம் கணவனோடு வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்ணுக்கு ஏற்படும் திகைப்பு, சமூகத்துக்கே ஒரு கேள்விக்குறியாகிறது.
திருமணம், குழந்தை, வசதியான வாழ்வு என்ற எதிர் பார்ப்புக்கள் மட்டுமுள்ள ஒரு சராசரிப்பெண், சமூக அநீதிகளை எதிர்க்கும் புரட்சிக்கு மாறுவதாக ஓர் உருமாற்றம் செயிகிறது நா.சுந்தரலிங்கத்தின் விழிப்பு' நாடகம். பெண்ணடிமை பற்றிய சிந்தனைகளை இந்நாடகங்கள் தூக்கலாகவே தருகின்றன.
இவையெல்லாம் தமிழின் நவீன நாடகங்கள் பெண்நிலை தொடர்பாகக் கூறும் கருத்துக்களாகும். மேலை நாடுகளில் 1960களில் தொடங்கி, 1980கள் வரை இரண்டாவது அலையாகத் தோன்றிய பெண்ணியம், அந்நாடுகளில் பரவலாகப் பரபரப்பூட்டி, தீவிர வளர்ச்சியடைந்து இப்பொழுது ஒரு நிதானப் போக்கில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் காலத்தில், தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளுக்குள்தான் 'பெண்ணியம்' என்ற சிந்தனையோடு படைப்பிலக்கியவாதிகள் எழுதி வருகின்றனர்; நவீன நாடக நிலையும் இதுதான். பெண்ணியம் பரபரப்பான நிலையில் பரவலாகப் பேசப்பட இங்கே இன்னும் காலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சமூக நெருக்கமும் போதாது, மனோபாவத்திலும் அதிக வளர்ச்சியில்லை என்னும் பொழுது இது மெல்லத்தான் நிகழும். அதனால்தான் தமிழின் நவீன நாடகங்கள், சமூக அக்கறையுள்ள கருத்து நிலைகளைக் கொண்டிருந்தாலும் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் இவற்றில் மிகுதியுமில்லை. தவிரவும் தமிழின் நவீன நாடகங்கள் நவீனம் என்று அழைக்கப்படுவதற்கான பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனவே தவிர, பரவலாக மக்களைச் சென்றடையும் இலக்கைக் கொண்டவை அல்ல. உலக நாடகாசிரியர்களை அறிந்திருக்கின்ற கல்வியாளர்கள் குறிப்பிட்ட ரசனை வகைகளை அறிந்திருக்கும் அழகியல் வாதிகள், திறனாய்வு நுட்பமுடைய இலக்கியவாதிகள் ஆகியோரை அவையோராகக் கொள்ளும் இந்நாடகங்கள், ஏனைய மக்கள் தொடர்பு சாதனங்கள் எடுத்துக் கொள்ளும் வரதட்சணை, பெண் சிசுக்கொலை, பெண்ணின் பல்வேறு குடும்பத்தளைகள் போன்ற பரவலான பெரும் பிரச்சினைகளை ஒதுக்கிவிடுகின்றன. இன்றைய பெண்களின் சமூக நடமாட்டத் தகுதியால் உருவாகியுள்ள கற்பு நெகிழ்ச்சியும் குடும்ப நெகிழ்ச்சியும் நாடகங்களில் இடம் பெறுகின்றன. இவை சமூக மரபிற்கு மாறுபட்ட, ஆயின் யதார்த்தமான கருத்துக்களாகும். பெண்நிலை கூறும் நாடகங்கள், பாலியல் சுரண்டல் பாலியல் வன்முறை இவற்றைத் தொட்டுக் காட்டுகின்றனவே தவிர, சாதகமான தீர்வுகளை நோக்கி அமையவில்லை. இந்நாடகங்களில், குடும்ப நிறுவனத்தின் அழுத்தம், பெண்ணை மனைவியாகவும், தாயாகவும் நிலைநிறுத்தல் இவற்றின் பதிவு அழுத்தமாகவே இருக்கிறது. பெண்ணின் 'தளைநீக்கம்' என்பது மற்றோர் ஆடவனைத் துணை சேர்ப்பதாகவே இருக்கிறது. சில இடங்களில் பெண்ணுக்குச் சமூக மரபு ஒரு சிக்கலாகிறது. இவ்வாறு மிதவாத பண்ணியக் கருத்துக்களையே தமிழின் நவீன நாடகங்கள் எடுத்தாள்கின்றன. மிதவாதப் பெண்ணியமே சமூகத்தில் பரவலாகப் பரவாத நிலையில், தீவிரப் பெண்ணிய வாதம் மேடையேறுவதற்கான காலம் இன்னும் வரவில்லை. மிதவாதக் கருத்துக்களையுமேகூட, இந்நாடகங்கள் மென்மையாகவே கூறுகின்றன. சேதமுற்ற பெண்களின் எழுச்சிக்கான அறைகூவல் இல்லை. பெண்ணியம் தொடர்பான புதிய கோட்பாடுகள் உருப்பெற வேண்டிய அவசியத்தை உணர்த்தவில்லை. இன்னுமே ஓர்அவலத்தொனிதான் நாடகங்களின் குரலாக இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நவீன, நாடகங்கள், சமூக, பெண்ணியம், இருக்கிறது, தமிழின், பரவலாகப், தமிழ், இந்நாடகங்கள், குழந்தை, குடும்ப, பெண்நிலை, பெண்ணியமும், கட்டுரைகள், கலைக், நாடகங்களும், நாடகக், இன்னும், நிலையில், தமிழ்நாட்டில், பாலியல், கொள்ளும், பெண்களின், தவிர, பல்வேறு, காலம், நெகிழ்ச்சியும், பெண்ணின், பெண்ணுக்கு, நாடகம், கொண்டவை, கலைகள், arts, drama, பெட்டைக்கு, பெண், கூறும், ஏற்படும், சமூகத்தில், பற்றிய, கருத்துக்களாகும்