புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
6. லண்டனில் அவைக்காற்றுக் கலைகள் பற்றிய ஒரு நாள் ஆய்வரங்கும் பின்வருவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும்.
சுந்தரராமசாமி, S.V. ராஜதுரை, கருஞ்சுழி ஆறுமுகம், கூத்துப்பட்டறை பசுபதி, பேராசிரியர் சிவத்தம்பி, கவிஞர் M.A. நுஹ்மான், க. வெங்கடாசலபதி, பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி.
இக்கால கட்டத்தில் Vaclav Havel எழுதிய 'பிரத்தியேகக் காட்சி', 'தரிசனம்', Harold Pinter எழுதிய 'போகிற வழிக்கு ஒன்று', Samuel Becket இன் 'திக்குத் தெரியாத காட்டில்', ரஞ்சிதராய் சௌத்திரியின் 'பாரததர்மம்', முருகையனின் 'இரு துயரங்கள்', மாவை நித்தியானந்தனின் 'ஐயா இலெக்ஸன் கேட்கிறார்', 'அவசரக்காரர்கள்', அம்பையின் 'ஆற்றைக் கடத்தல்', A.S.A. ராமின் 'எப்போ வருவாரோ' ஆகிய நாடகங்களுடன் கலாநிதி மௌனகுருவின் 'வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்', 'தப்பி வந்த தாடி ஆடு', 'நம்மைப் பிடித்த பிசாசுகள்', சிவசேகரத்தின் 'மலைகளை அகற்றிய மூடக்கிழவன்', 'அயலார் தீர்ப்பு' ஆகிய சிறுவர் நாடகங்களும்புதிதாகத் தயாரிக்கப்பட்டன. இலங்கையில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினராலும், வேறு குழுக்களாலும் ஏற்கனவே மேடையிடப்பட் நாடகங்களுடன், பத்து நாடகங்கள் லண்டனில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பபிடத்தக்கது.
5.4 லண்டனிலும் மற்றய நாடுகளிலும் ஆதரவு :
லண்டனில் பொதுவாக தமிழ் அமைப்புகள் பிரதேச வரையறைக்குள் இயங்குகின்றன. வடக்கு லண்டனில் வசிப்பவர்கள், கிழக்கு லண்டனில் நிகழும் ஒரு கலைநிகழ்ச்சிக்குச் செல்வது குறைவு. வாகன போக்குவரத்து நெருக்கடி, மற்றும் செலவு காரணமாக இருக்கலாம். லண்டனில் ஒரு பிரதேச வரையறைக்குள் மட்டும் நிற்காமல், வெவ்வேறு பகுதிகளில் நாடக நிகழ்ச்சிகளை - விழாக்களை நடத்துவது பரந்துபட்ட பார்வையாளர்களை அடையும் என்ற ரீதியிலேயே தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழக லண்டன் நாடக விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படி இயங்கும் தமிழ் அமைப்புகள் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். இந்த ரீதியில் இதுவரை சுமார் எழுபது மேடையேற்றங்கள் லண்டனில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன. ஆரம்பகாலத்தில் நுழைவுச் சீட்டுகளை வீடுகளுக்குக் கொண்டுசென்று விற்றால் மட்டுமே பார்வையாளர்களை நாடக நிகழ்ச்சிக்கு வரச்செய்ய முடியும் என்ற நிலையே இருந்தது. காலப்போக்கில் தமிழ் வானொலி, பத்திரிகை, தமிழ்க் கடைகள் என்று விளம்பர வசதிகளும் அதிகமாக, இந்தப் பிரச்சினை ஓரளவு குறைந்து, மண்டப வாயிலில் ஓரளவு மக்கள் தாமாகவே நுழைவுச்சீட்டுப் பெற்று நாடகம் பார்க்க வரத்தொடங்கினர். 'தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்' என்ற ரீதியில் இடைவிடாது தொடர்ந்த முயற்சிகள் பலன்தர ஆரம்பித்தன. தற்போது கடந்த இரண்டு செய்ய வருட காலமாக, நாடக விழாக்களை வர்த்தக ஸ்தாபனங்கள் முழுமையாக sponsor ஆரம்பித்துள்ளன. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் லண்டனில் உள்ள ஆங்கில அரங்கமான Paul Robson Theatre, தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தை அழைத்து தாமாகவே ஒரு நாடக விழாவை தமிழில் நடத்தியமை, இக் கழகத்திற்குக் கிடைத்த ஒரு நல்ல அங்கீகாரம் ஆகும்.
மற்றைய புலம் பெயர் நாடுகளில், பெருவாரியான மக்கள் தாமாகவே நுழைவுச்சீட்டு வாங்கி நாடகம் பார்க்க வந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. கனடாவில் இரண்டு முறையும் சுமார் எண்ணூறுக்கு மேற்பட்டவர்கள் திரண்டிருந்தனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் தமிழர் தொகை குறைவாக இருந்தபோதும் சுமார் 600 பேர் தாமாகவே நுழைவுச்சீட்டு வாங்கி நாடகம் பார்க்க வந்தனர். தற்போது இந்த ஆய்வரங்கினை நடத்தும் சிட்னி தமிழ் அரங்கத் கலைகள் சக இலக்கியப் பவர் சிட்னியில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நாடக விழாவை நிகழ்த்தியபோது, நாடகம் ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பெருந்தொகையான மக்கள், மண்டப வாயிலில் திரண்டிருந்தனர். வாசல் திறந்ததும் மண்டபம் நிறைந்தது. சுவிஸ்லாந்தில் நுழைவுச்சீட்டுகளை முதலே விற்பனை செய்திருந்தார்கள். பாரிசில் எதிர்பார்த்த அளவில் சனக்கூட்டம் திரளவில்லை. ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்தமிழரின் ரசிப்புத் தன்மை சற்று வித்தியாசமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்டு, வெவ்வேறு விதமான கல்வி, தொழில் பின்னணியுள்ள ஈழத்தமிழர் தொகையினரைக் காணக்கூடியதாக இருந்தது. அதற்கேற்ப அவர்களது கலாசார நடவடிக்கைகளும் வேறுபடுகின்றன. ஆரம்பகாலத்தில், மற்றைய புலம்பெயர் நாடுகளில் நாடக விழாக்களை நடத்துவதற்கு, எமது குழுவினர் பலரது வதிவிட அனுமதி சீராக்கப்படாமல் இருந்தமை ஒரு தடையாக இருந்தது. பின்னர் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த போதும் இலங்கையர் கடவுச்சீட்டுடன் விசா எடுப்பது பகீரத பிரயத்தனம் தான். விசா கெடுபிடிகள், விமான நிலையங்களில் இலங்கையரை நடத்தும் முறைகள் குறித்து தனியாக எழுதப்பட வேண்டும். இந்தக் கட்டுரையின் சுருக்கம் கருதி தவிர்க்கப்படுகிறது.
6. சிறுவர் நாடகங்கள் :
அந்நியச் சூழலில் எமது சுய அடையாளத்தை இனம் காணவும் இச்சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழவும் பலமான ஒரு அத்திவாரத்தை எமது சிறுவர் மத்தியில் கட்டியெழுப்பவேண்டும். மரபு பேணும் முயற்சியில் பரதம், கர்நாடக சங்கீதம், ஆகியவற்றில் காணப்படும் ஆர்வம் நாடகத்துறையில் இல்லை என்பது கசப்பான உண்மை. லண்டனில் தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில், சிறுவர்களுக்கான நாடகத்தை அறிமுகப்படுத்தும் ஆங்கிலச் சூழலில் வளரும் சிறார்கள் தமிழ்மொழியை சரளமாகப் பேசிப் பயில்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதாகவும் அமையவேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, லண்டனில், தமிழ், நாடகம், புலம்பெயர், தாமாகவே, கலைகள், அவைக்காற்றுக், வெவ்வேறு, கலைக், மக்கள், விழாக்களை, வளர்ச்சியும், அரங்கு, பார்க்க, எமது, நாடுகளில், பிரச்சினைகளும், சுமார், கட்டுரைகள், நாடகக், சிறுவர், விழாவை, மற்றைய, இரண்டு, தற்போது, தொடர்ந்த, கடந்த, நுழைவுச்சீட்டு, விசா, சூழலில், மத்தியில், drama, நடத்தும், வாங்கி, திரண்டிருந்தனர், பேராசிரியர், எழுதிய, வரையறைக்குள், குறைவு, நாடகங்களுடன், பிரதேச, அமைப்புகள், நாடகங்கள், நாடுகளிலும், பகுதிகளில், ஆகிய, ஓரளவு, மண்டப, ஆரம்பகாலத்தில், arts, பார்வையாளர்களை, ரீதியில், வாயிலில்