உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உற்ற குறி அழியும் ஓதும்கால் பாடைகளில் சற்றும் பொருள்தான் சலியாது - மற்றது கேள் ஈசன் அரூள் ஆவி எழில் ஆர் திரோதமலம் ஆசு இல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம். | 41 |
சிவன் அருள் ஆவி திரோதமலம் ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் - இவன்நின்று நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள் சிம்முதலா ஓதுநீ சென்று. | 42 |
அண்ணல் முதலா அழகு ஆர் எழுத்து ஐந்தும் எண்ணில் இராப்பகல் அற்று இன்பத்தே - நண்ணி அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை இருளானது தீர இன்று. | 43 |
ஆதிமலம் இரண்டும் ஆதியாய் ஓதினால் சேதியா மும்மலமும் தீர்வு ஆகா - போதம் மதிப்பு அரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி விதிப்படி ஓது அஞ்செழுத்துமே. | 44 |
அஞ்சுஎழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்சுஎழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் - அஞ்சுஎழுத்தே ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம் மோனந்த மாமுத்தி யும். | 45 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், உண்மை, எழுத்து, அருள், விளக்கம், அஞ்சுஎழுத்தே, சித்தாந்த, சாத்திரங்கள், அண்ணல், இன்பத்தே, திரோதமலம், இலக்கியங்கள், அஞ்சின், ஐந்தும்