உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. | 36 |
மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கி அருள் தான் எடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம் தான். | 37 |
மோனந்த முனிவர் மும்மலத்தை மோசித்துத் தான் மான் இடத்தே தங்கியிடும் - ஆனந்தம் மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் அருள் மூர்த்தியாக் கொண்ட திரு அம்பலத்தான் கூத்து | 38 |
பரை இடமா நின்று மிகு பஞ்சாக்கரத்தால் உரை உணர்வுக்கு எட்டா ஒருவன் - வரைமகள்தான் காணும்படியே கருணை உருக்கொண்டு ஆடல் பேணு வார்க்கு உண்டோ பிறப்பு. | 39 |
திருவைந்தெழுத்து ஓதும் முறை
நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர் ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி - தீது அறவே அஞ்சு எழுத்து ஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ தஞ்ச அருள் குருவே சாற்று. | 40 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், தான், நூல்கள், விளக்கம், எழுத்து, அருள், உண்மை, சித்தாந்த, சாத்திரங்கள், ஆடல், இலக்கியங்கள், நின்று