உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார் எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது. | 6 |
குறிகுலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா அறுபுள்ளி ஆர் அமுத விந்துப் - பிறிவு இன்றி மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேஎன்று ஒண்புதல்வா! ஆகமம் ஓதும். | 7 |
பார் ஆதி ஐந்தும் பன்னும் அதி தெய்வங்கள் ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் - ஓர் ஓர் தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றம் முதல் ஐந்தும் பழுதறவே பண்ணுவர்காண் பார் | 8 |
படைப்பன் அயன் அளிப்பன் பங்கயக்கண் மாயன் துடைப்பன் உருத்திரனும் சொல்லில் - திடப்பெறவே என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும் அன்றே அநுக்கிரகர் ஆம். | 9 |
மண்கடினமாய்த் தரிக்கும் வாரிகுளிர்ந்தே பதம் ஆம் ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் - வண்கால் பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. | 10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், உண்மை, சாத்திரங்கள், சித்தாந்த, விளக்கம், ஐந்தும், அயன், பார், இலக்கியங்கள், என்றும், நிற்கும்