திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவருட்பயன் - நான்காம் பத்து
4. அருளது நிலை
அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும் பொருளில் தலைஇலது போல். |
31 |
பெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும் அருக்கனென நிற்கும் அருள். |
32 |
ஊனறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றுமிவை தானறியாதார் அறிவார் தான். |
33 |
பால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள் மால்ஆழி ஆளும் மறித்து. |
34 |
அணுகும் துணைஅறியா ஆற்றோனில் ஐந்தும் உணர்வை உணராது உயிர். |
35 |
தரையை அறியாது தாமே திரிவோர் புரையை உணரார் புவி. |
36 |
மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெட்த்தோர் ஞானம் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். |
37 |
வெள்ளத்துள் நாவாற்றி எங்கும்விடிந்து இருளாம் கள்ளத் தலைவர் கடன். |
38 |
பரப்புஅமைந்து கேண்மின்இது பாலல்கலன்மேல் பூஞை கரப்பு அருந்த நாடும் கடன். |
39 |
இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா வெற்று உயிர்க்கு வீடு மிகை. |
40 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருவருட்பயன், சாத்திரங்கள், சித்தாந்த, கடன், இலக்கியங்கள்