திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவருட்பயன் - மூன்றாம் பத்து
3. இருள்மல நிலை
துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும் இன்றென்பது எவ்வாறும் இல். |
21 |
இருளானது அன்றி இலதெவையும் ஏகப் பொருளாகி நிற்கும் பொருள். |
22 |
ஒருபொருளும் காட்டாது இருளுருவம் காட்டும் இருபொருளும் காட்டாது இது. |
23 |
அன்றுஅளவி உள்ளொளியோடு ஆவி இடைஅடங்கி இன்றளவும் நின்றது இருள். |
24 |
பலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும் கணவற்கும் தோன்றாத கற்பு. |
25 |
பன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத தனமை இருளார் தந்தது. |
26 |
இருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். |
27 |
ஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை பேசாது அகவும் பிணி. |
28 |
ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம் என்றும் அகலாது இருள். |
29 |
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை வடிவுஆதி கன்மத்து வந்து. |
30 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருவருட்பயன், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, இருள், காட்டாது, இலக்கியங்கள், பொருள்