திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஆற்றா லலைகடற்கே பாய்ந்தநீ ரந்நீர்மை மாற்றியவ் வாற்றான் மறித்தாற்போற் - றோற்றிப் புலன்களெனப் போதம் *புறம்பொழியி னந்தம் மலங்களற மாற்றுவிக்கும் வந்து. |
11 |
*புறம்பொழியும் |
பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதுங் காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன் மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங் கரணம்போ லல்லாமை காண். |
12 |
தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின் றாங்களே சட்டவுறங்குவர்க - ளாங்கதுபோல் ஐய னருட்கடைக்க ணாண்ட தற்பி னப்பொருளாய்ப் பைய விளையுமெனப் பார். |
13 |
உள்ள முதலனைத்து மொன்ற *வொருவவரில் உள்ள முருகவந் துன்னுடனாந் - தெள்ளி உணருமவர் தாங்க ளுளராக வென்றும் புணருமவ னில்லாப் பொருள். |
14 |
*உருகவரில் |
நல்லசிவ தன்மத்தா னல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தா னானழியும் - வல்லதனால் ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண் ஆரெனுங் காணா வரன். |
15 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், நல்லசிவ, இலக்கியங்கள், உள்ள