திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் றன்வசன மாத்திரத்தே *வாய்க்குநலம் வந்துறுமோ - யார்த்தகடல் தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு. |
6 |
*வாய்த்தவளம் |
இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில் நின்ற மலமனைத்து நீக்குவதிங் - கென்றால் உருவுடையா னன்றே யுருவழியப் பாயும் உருவருள வல்லா னுரை. |
7 |
கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவரே *யண்டத்தி னப்புறத்த தென்னாதே - யண்டத்தின் அப்புறமு மிப்புறமு மாரறிவுஞ் சென்றறியும் எப்புறமுங் கண்டவர்க ளின்று. |
8 |
*அண்டத்த |
அன்றுமுத லாரேனு மாளா யுடனாகிச் சென்றவர்க்கு மின்னதெனச் சென்றதிலை - யின்றிதனை எவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அவ்வா றிருந்த தது. |
9 |
ஒன்றுங் குறியே குறியாத லாலதனுக் கொன்றுங் குறியொன் றிலாமையினா - லொன்றோ டுவமிக்க லாவதுவுந் தானில்லை யொவ்வாத் தவமிக்கா ரேயிதற்குச் சான்று. |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், சித்தாந்த, இலக்கியங்கள்