திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
விரிந்துங் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டுந் தெரிந்துந் தெரியாது நிற்பர் - தெரிந்துந் தெரியாது நிற்கின்ற சேயிழைபா லென்றும் பிரியாது நின்றவனைப் பெற்று. |
66 |
ஆதனமு மாதனியு மாய்நிறைந்து நின்றவனைச் சேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச் சேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர் ஏதமறக் கண்டவர்க ளின்று. |
67 |
தாமடங்க விந்தத் தலமடங்குந் தாபதர்கள் தாமுணரி லிந்தத் தலைமுணருந் - தாமுனியிற் பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும் நாமடந்தை நில்லாள் நயந்து. |
68 |
துரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும் பிரியாதே நிற்கின்ற பெம்மான் - றுரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும் *ஆக்குவிப்ப னன்பர்க் கவன். |
69 |
*ஆக்கியிடும் அன்பர்க்கவன் |
ஓடஞ் சிவிகை யுலவாக் கிழியடைக்கப் பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - 1*ஏடெதிர்வெப் பென்புக் குயிர்கொடுத்த 2*லீங்கிவைதா மோங்புகழ்த் தென்புகலி வேந்தன் செயல். |
70 |
1*ஏடெரிவெப்; 2*ஈங்கிவைகாண் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், நிற்கின்ற, தெரியாது, இலக்கியங்கள், தெரிந்துந்