திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
செய்தற் கரிய செயல்பலவுஞ் *செய்துபலர் எய்தற் கரியதனை யெய்தினார்கள் - ஐயோநாஞ் செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச் செய்யாமை செய்யாத வாறு. |
61 |
*செய்து சிலர் |
இப்பொருள்க ளியாதேனு மேதேனு மொன்றுசெய்த லெப்பொருளுஞ் செய்யா தொழிந்திருத்தன் - மெய்ப் பொருளைக் கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம் உண்டிருப்ப தென்னோ வுரை. |
62 |
வீட்டிலே சென்று வினையொழிந்து 1*நின்றாலும் நாட்டிலே நல்வினைகள் 2*செய்தாலுங் - கூட்டில்வாள் சாத்தியே நின்றிலையேற் றக்கனார் வேள்விசெய்த மாத்திரமே யாங்கண்டாய் வந்து. |
63 |
1*நின்றிடினும்; நின்றிடிலென் 2*செய்திடிலென் |
சிவன்முதலே யன்றி முதலில்லை யென்றுஞ் சிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன தென்செயல தாகின்ற தென்று மிவையிற்றைத் தன்செயலாக் கொள்ளாமை தான். |
64 |
இன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன் ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் -இன்றிங்கே அங்க முயிர்பெறவே பாடு *மடியவரார் எங்குமிலை கண்டா யிது. |
65 |
*அடியவர்கள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், சித்தாந்த, செய்யாமை, இலக்கியங்கள்