சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்பம்
புவன மியாவையும் புனிதன துருவாஞ் சிவமுஞ் சத்தியு மெனத்தெளி யவற்று ளசேதன மென்றொன் றறைதற் கிலதது சேதந னுகர்பொழு திரண்டுமோர் திறத்தே யிதுவெனு மொன்றை யதுவாய்ப் படுத்துப் பொதுமையி னிற்கும் போதமென் றறிக பொற்பணி பேதம் புரைவழி யொருவழி நற்பொனிற் றிகழ்வென நயப்பதொன் றன்றா லாவது மாகா தொழிவது மெனுமிப் பாவக முண்மை பாரா தோர்க்கே பாரா தோரெனப் பல்லுயிர் பகர்தலி னாராய்ந் துரைக்கி நவைபிற வல்ல பலபல பேத மிலவென் போருமில் கண்ணின தொளியைக் கண்ணின தெனிலது திண்ணிய விருளிற் செறிபொரு டெரித்தலு மின்மை மின்மினி யெனவிரு கண்மணித் தன்மை தானுந் தாவில ததனாற் கண்ணின துருவு மதிற்கதி ரொளியும் நண்ணருஞ் சத்தி சத்தர்க ணடிப்பே யுலகே ழெனத்திசை பத்தென வொருவன் பலவாய் நின்ற படியிது வென்றும் ஊணா யுயிரா யுணர்வா யென்றும் மானக் கண்ணே மணியே யென்றுந் தாமே தாமாய்ச் செய்தன ரென்றும் நாமே சிவமாய் நண்ணின மென்றுங் காயாய்ப் பழமாய்ச் சுவையாய் நுகர்வு மோயா துண்போன் றானே யென்றும் அறிவோன் றானு மறிவிப் போனும் அறிவா யறிகின் றோனு மறிவுறு மெய்பொரு டானும் வியந்திது வெனப்படு மப்பொரு ளியாவு மவனே யென்றுந் தாய்தலைப் பட்டங் கொன்றாய்த் தென்றும் ஏதம தறநான் கெட்டே னென்றும் மின்னு மின்னு மிறையா னளித்தவை பன்னி லென்னரும் பான்மைத் தாதலிற் றருபொருள் கொள்பொரு டருவோன் கொள்வோன் ஒருபொரு ளிவ்விய லுவப்பென வுணர்க நுகர்பொருள் சத்தி நுகர்வோன் சத்தனென் றிகலறு முணர்வுவந் தெய்துத லரிதே நானவ நெனுமிது நவைவழி நல்வழி தானவ நாகை யிதுசா யுச்சிய மித்திறன் றெளிய வுய்த்திடு மளவு மியாதொரு வகையி னீதிய தாகத் தானறி வழியே தலைநின் றென்று மூனுயிர் சிவத்தி லொடுங்கிட நடத்தி மூடு முழுமலம் வீடுங் காலைக் கருவிக ளளவிற் புரிதரு மறிவு சாக்கிரங் கனவு நீக்கமில் சுழுனை துரிய மென்றவை பயிறரு மறிவு துரியா தீதந் திரியாத் தன்மையி லிறையரு ளுதவுங் கறையற மாறி யறிவே யாகும் பிறியாக் கருவிக ணிறைமுத லவத்தையி லறிவில தாகத் துரியா தீதத் தோற்றந் திரியா ததுநற் சிவகதித் திறனே. |
நிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்ப நிராகரணம்
திறம் பெற நீயிங் கறைந்தமை கருதிற் புவன மியாவையும் புனிதன துருவெனி லவன்முதற் காரண மன்றா மென்னி நிமித்த காரண நிகழ்த்துக வெனநீ யவனே காரண மனைத்துமென் றறைந்தனை மண்டனிக் குலாலன் றண்டசக்க ராதி காரண மூன்று மோர்பே ரணைந்ததித் தாரணி யதனிற் கண்டது சாற்றுக வத்த னியற்று மித்தொழில் பிறர்க்கோ தனக்கோ வீணோ வெனக்கீ தியம்புக வீணெனிற் பித்தர் மாண்பறுந் தொழில்போற் றலமையு மறிவு மிலதென விகழ்வர் தனக்கெனி ல·துமு நிற்பதொன் றன்றே தன்போ லறிஞருந் தலைவரு மிலரான் மின்போ னிலைமையை வேண்டலும் பழுதே பிறர்கெனிற் பிறரும் பிறர்க்காம் பொருளும் பொருட்கமை கருவியு மதற்குபா தானமுஞ் செய்கையு மென்றோ ரைவகைத் தானொடு மாறாச் சைவர் கூறா ரென்றா னின்சித் தாந்த மவசித் தாந்த மென்சித் தான்ற வசித்தைமற் றீனா தசித்தில தென்னி லசித்ததென் னுலகி லுலகா யதனும் பூதக கூட்டஞ் சலமேற் கொப்புட் டகுமெனச் சாற்றினன் தீய கருமச் சீனர்சா வகர்பிறர் நேய மில்லென நிகழ்த்தின ரிலரே காண்டல் விரோத நிற்பிறர் கணித்தில ரீண்டுன துரைக்குமற் றியார்கரி யுடலுஞ் சித்தோ சித்தின் சேர்வாற் சித்தெனிற் கடப டாதியு முடற்கட் சிதைவென் தாபர வுயிர்போற் றநுவொழிந் திவற்றின் மேவிய வுணர்வு விரவிடு மென்னிற் சடத்துயிர் போலெனச் சாற்றினை யாகலி னுடற்குயி ரிறையை யொழிந்திண் டன்றே தருதிட் டாந்தமுந் தாட்டாந் திகமும் ஒருபொரு ளாகி லுவமை பெறாதே யொன்றே யாகி லுடற்கிறை தாபரத் தொன்றிய நிலையில் விசேடமென் னுரைக்க பூதச் சேர்வைப் பேதமென் றறையிற் சேர்வைப் பேத மென்கொடு செப்புக கருமத் தளவில் வருமெனிற் பித்த ருரையிற் றிகழு முணர்வொழிந் தநையே கருமஞ் செய்வோன் கடவுளன் றுடலு மருவி நின் றிருவினை வளரா நுகரா கடவுளு முடலின் கண்பட றுஞ்ச லிடர்நல முறுத லிறங்குத லேறுத லெவ்வகை யேனுஞ் செய்கையின் றாதலும் பலகலை யுலகி னிலவுத லானு மெண்ணரும் பொருளு மிரவியு மொழியக் கண்ணென வொன்று காண்கையி னாலும் பாசப் பகுதியு மீசனு மொழியப் பசுவு முண்டென் றிசையவேண் டின்றே யிதுவெனு மொன்றை யதுவாய்ப் படுத்துப் பொதுமையி னிற்கு மாயையின் பொற்பெனப் பொற்பணி யாவும் பொன்னாந் தன்மையி னிட்கள சகளத் திருவுரு நிலையு மீச னேயெனப் பேசுவ ரன்றி யருவுரு வாகி வருமுல கென்னி லனைத்து மாயை யெனத்தெளி கிலையே யாவது மாகா தொழிவது மிலதெனும் பாவக முலகா யதனது பான்மை கட்கொலை வெகுளி காமங் களவுக ளுட்படு மிவைவிட மொழியா தாரிலர் சோம பானஞ் சுராபா னங்க ளாமென மறைக ளார்செவிப் பறைந்தன மறையோன் புலைச்சியை மருவு மென்பது முறையோ வெனிலது புனைமொழி யென்னிற் சாதி பேத நீதிநீ தவறினு மேதியை யேறு விழையா விரும்புங் கண்ணின துருவு மதிற்கதி ரொளியு நண்ணருஞ் சத்தி நாடக மெனிலதற் கேதுவும் பயனு மோத வேண்டும் நின்மொழி விரோதமு நீடுல கியற்கையுந் தன்மசாத் திரமுஞ் சகலமு மென்செயும் உலகே ழெனவிறை பலவாந் தன்மை கடமொடு சாரவங் கலச மாதிக ளடலுறு குயவ னாயின னென்றாற் றானே யாகா வவைதா னாகா னாயின னென்ப தாக்கின னெனவே யானா யென்ப தனைத்தி மவ்வகை தானா காமையைச் சாற்றிடு மென்க தாமே யெனுமித் தனியே காரம் அழிந்தில ரதுவே யாய்த்தில ரதுவிட் டொழிந்திலர் பிரிவில ரெனுமிவை யுணர்த்துங் காயும் பழமுஞ் சுவையு நுகர்வ தாயவன் றானு மவன்முதற் றென்னும் அகிலமுந் தெளிய வறிவோன் றானும் அகிலமு மறிஞரை யறிவிப் போனும் அறிஞர்க் கறிவா யறிகின் றோனும் அறிவிற் கறிபொரு ளாவோன்றானு மகிலமு மேனி யானவ னென்னுந் தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோ னொருபொரு ளாயி னுவப்புண் டென்க நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டிற் றிகலறக் கிடையா திருந்ததெ னிரையமும் வேண்டா ராயினு மெய்யுறு வியாதிக ளீண்டா தொழியா திறைக்கவை யீடல சத்தியுஞ் சிவமுந் தாமே நுகருமென் றித்திற நுணர்வுவந் தெய்துவ தெவர்க்கோ மமைப்பற வுணர்தலு மவர்க்கடை வன்றே நானு மவனு நவையு நலனுந் தானவ னாகையு நின்சா தனத்தில் சகயோ கத்தைச் சாயுச் சியமெனப் பகர்வது பதிபசு பாசத் தவர்க்கே யாதொரு வகையென வோதிய திறை நூல் சொன்னவற் றொன்றன் றென்னில்வீ டெளிதே தானறி வழியே தலைப்பொருள் பிடித்து மேனிகழ் பலமும் வீடளித் திடுமே நிலையாக் கருவியை நிலையாக் கருதிப் புலையா டுதலு முலகா யதன்பொருள் குட்டிய மின்றிநற் கோல மெழுதுத லிட்டம தாயிற் கருவியு மிடங்களுங் கருத்துற வுரைக்கத் தெரித்திடு மதீதத் தறிவொன் றில்லோர்க் கிறையரு ளுதவுதல் பிறிவறி வரிய செறியிரு ளிடத்தோ ரந்தகர்க் காண வந்தோ ரெம்மை நீவிருங் காண வேண்டு மென்றாங் கெடுத்தோர் தீபங் கொடுத்ததை யொக்கும் இச்செயற் கிறைவன் கொச்சைய னன்றே கருவி வசத்திற் ரெரிவுறக் காண வேண்டுந ரிலரா லீண்டறி வியாவுஞ் சிவமே யென்று செப்பினை யவமுறு பொறிபுல னறியா வறிவது பிரம மென்றோர்க் குன்போ லிடர்ப்பட லிலதே யேற்றங் கருவி யிருபதோ டிரண்டும் போற்றுமைந் தவத்தையும் புகறிரி மலமு மீசனு முயிரும் பேசினை ய·தொழிந் தொன்றே யாகு மென்றநின் னியல்பு தாயர் மனைவியர் தாதியர் தவ்வைய ராயவ ரெவரையு மோர்மையிற் காணுங் கோகழி தூர்த்தர் கொடுந்தொழி றகுமே யாக மற்றத னருணிலை தன்னிலை யேக நாயக நாகிய விறைநிலை நாசமில் பாசம் வீசிய வியனிலை யினையவை யொன்று நினைவினு மின்றி யுண்டெனு முணர்விற் கண்டது கருதி விழுக்கெனும் புலன்வழி யொழுக்கமு மதுவாக் கொண்டு பண்டையி லெண்டரு மடங்கு வந்தவர் செய்த தந்தையை யன்றே புன்மைக ணீங்க வுண்மை கேண்மதி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், காரண, கண்ணின, நூல்கள், சங்கற்ப, நிராகரணம், சாத்திரங்கள், சித்தாந்த, தாமே, மறிவு, சத்தி, தானவ, தானறி, தாகத், நுகர்பொருள், யறிகின், மின்னு, ஒருபொரு, வழியே, நுகர்வோன், தன்மையி, முலகா, மீசனு, னாயின, நிலையாக், கருவி, சேர்வைப், தாந்த, துரியா, போனும், கண்டது, கருவியு, கருவிக, யென்றும், யிதுவெனு, மொன்றை, யதுவாய்ப், படுத்துப், புனிதன, மியாவையும், இலக்கியங்கள், நிமித்தகாரண, பரிணாமவாதி, புவன, பொதுமையி, பொற்பணி, மதிற்கதி, நண்ணருஞ், யென்றுந், றானே, துருவு, தன்மை, மாகா, தொழிவது, பாவக, பாரா, றானு