நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தசாங்கம்
1.மலை
பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற் குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே |
2.ஆறு
செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம் களவுபயங் காமங் கொலைகோபங் காதி அளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத் தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில் செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின் காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங் கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ் மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற ஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல் வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ மோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங் காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப் புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின் சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால் ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண் மீதான பத்து மிகப்பரந்து - காதிப் |
பிறுதிவியப் புத்தேயு வாயுவா காய வுறுதி நிலமைந்து மோடி - மறுவிலா நான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்த தான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில் அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு மவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச் செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந் தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா வூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா |
வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத் தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம் |
3. நாடு
பண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்து நண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண் |
4. ஊர்
கலையா லுணர்ந்து கருத்தழிந்து காம நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால் ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால் |
5. தார்
தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந் துண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும் புளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல் உளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன் மேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், நெஞ்சு, சித்தாந்த, தூது, விடு, காதி, இலக்கியங்கள்