எட்டாம் திருமுறை - திருவாசகம் - 2.கீர்த்தித் திரு அகவல்
2.கீர்த்தித் திரு அகவல்
படிமப் பாதம் வைத்த அப்பரிசும் ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் | 80 |
சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயாறு அதனில் சைவன் ஆகியும் | 85 |
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் | 90 |
குற்றாலத்துக் குறியாய் இருந்தும் அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு இந்திர ஞாலம் போலவந்து அருளி எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்துத் | 95 |
தானே ஆகிய தயாபரன் எம் இறை சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் மந்திர மாமலை மகேந்திர வெற்பன் | 100 |
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் எம் தமை ஆண்ட பரிசு அது பகரின் ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் | 105 |
ஆனந் தம்மே ஆறா அருளியும் மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் | 110 |
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதலன் ஆகிக் கழுநீர் மாலை ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும் அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் | 115 |
பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாராவழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும் பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன் உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் | 120 |
ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய தேவ தேவன் திருப் பெயர் ஆகவும் இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள்மலை யாகவும் எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் | 125 |
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி நாயினேனை நலம்மலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் | 130 |
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் எய்த வந்திலாதார் எரியில் பாயவும் மாலது வாகி மயக்கம் எய்தியும் பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி | 135 |
நாத நாத என்று அழுது அரற்றி பாதம் எய்தினர் பாதம் எய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் | 140 |
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் | 145 |
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 2.கீர்த்தித் திரு அகவல் , அதனில், இருந்தும், அருளிய, திரு, பெருமை, பாதம், திருமுறை, அகவல், கீர்த்தித், திருவாசகம், ஆகவும், அருளியும், உடன், பொலிதரு, ஒன்ற, அருள், பொதுவினில், ஆகிய, தன்னில், பரிசும், காட்டியும், எட்டாம், இருந்து, எவ்வெவர், அழகு
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->
');
if (iWwidth > 1140) {
document.write('');
}else if(iWwidth <=1140 && iWwidth >= 0 ){
document.write('
');
document.write('');
document.write('
');
document.write('');
document.write('
');
}
document.write('');
//-->