எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஆறாம் அதிகாரம்
ஆறாம் அதிகாரம்
6. முன்னுற வுணர்தல்
நூற்பா
வாட்டம் வினாதீல் முன்னுற வுணர்தல் கூட்டி உணரும் குறிப்புரை யாகும். |
பேரின்பக் கிளவி
முன்னுற உணர்தல் எனஇ·து ஒன்றும் சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது. |
1. வாட்டம் வினாதல்
நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமித் திருத்தம் பயிலும் கனைகுடைந்(து) ஆடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. |
62 |
கொளு மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது. |
முன்னுற வுணர்தல் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஆறாம் அதிகாரம் , முன்னுற, வுணர்தல், திருமுறை, அதிகாரம், ஆறாம், பயிலும், வாட்டம், எட்டாம், திருக்கோவையார்