எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஐந்தாம் அதிகாரம்
ஐந்தாம் அதிகாரம்
5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்
நூற்பா
ஐய நாடல் ஆங்கவை இரண்டும் மையறு தோழி அவன்வர வுணர்தல். |
பேரின்பக் கிளவி
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் துறையோர் இரண்டும் சிவம்உயிர் விரவியது அருளே உணர்ந்திடல் ஆகும் என்ப. |
1. ஐயறுதல்
பல்இல னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல் எல்இலன் நாகத்தோ(டு) ஏனம் வினாஇவன் யாவன்கொலாம் வில்இலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர் சொல்இலன் ஆகற்ற வாகட வான்இச் சுனைப் புனமே. |
60 |
கொளு அடற்கதிர் வேலோன் தொடர்ச்சி நோக்கித் தையல் பாங்கி ஐயம் உற்றது. |
2. அறிவு நாடல்
ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய் மாழைமெல் நோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. |
61 |
கொளு வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது. |
இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஐந்தாம் அதிகாரம் , உள்வழி, திருமுறை, அதிகாரம், இருவரும், ஐந்தாம், கொளு, வுணர்தல், நோக்கி, பாங்கி, அவன்வர, அறிவு, வரவுணர்தல், எட்டாம், திருக்கோவையார், அவன், நாடல், இரண்டும்