எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - இருபத்தொன்றாம் அதிகாரம்
இருபத்தொன்றாம் அதிகாரம்
21. காவற்பிரிவு
பேரின்பக் கிளவி
காவற் பிரிவுத் துறையோர் இரண்டும் இன்பத் திறத்தை எங்கும் காண்டல். |
1. பிரிவு அறிவித்தல்
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான் வியன்தில்லை யான்அரு ளால்விரி நீர்உலகம் காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்கயற்கண் பூப்பால் நலம்ஒளி ரும்புரி தாழ்குழல் பூங்கொடியே. |
312 |
கொளு இருநிலம் காவற்(கு) ஏகுவர் நமரெனப் பொருகடர் வேலோன் போக்(கு)அறி வித்தது. |
2. பிரிவு கேட்டு இரங்கல்
சிறுகண் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத் தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன் உறுகண் தழலுடை யோன்உறை அம்பலம் உன்னலரின் துறுகள் புரிகுழ லாய்இது வோஇன்று சூழ்கின்றதே. |
313 |
கொளு மன்னவன் பிரிவு நன்னுதல் அறிந்து பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது. |
|
காவற்பிரிவு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - இருபத்தொன்றாம் அதிகாரம் , திருமுறை, பிரிவு, இருபத்தொன்றாம், அதிகாரம், கொளு, எட்டாம், காவற், காவற்பிரிவு, திருக்கோவையார்