எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினாறாம் அதிகாரம்
பதினாறாம் அதிகாரம்
16. உடன் போக்கு
பேரின்பக் கிளவி
உடன்போக்(கு) ஐம்பதோ(டு) ஆறு துறையும் அருள்உயிர்க்(கு) அருமை அறிய உணர்த்தலும் ஆனந் தத்திடை அழுத்திற் திரோதை பரைவழி யாக பண்புணர்த் தியது. |
1. பருவங் கூறல்
ஓராகம் இரண்டெழி லாய்ஒளிர் வோன்தில்லை ஒண்ணுதல்அங் கராகம் பயின்(று) அமிழ் தம்பொதிந்(து) ஈர்ஞ்சுணங்(கு) ஆடகத்தின் பராகம் சிதர்ந்த பயோதரம் இப்பரி சேபணத்த இராகங்கண் டால்வள்ள லேஇல்லை யேஎமர் எண்ணுவதே. |
194 |
கொளு உருவது கண்டவள் அருமை உரைத்தது. |
2. மகட் பேச்சுரைத்தல்
மணிஅக்(கு) அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர் பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத் துணியக் கருதுவ(து) இன்றே துணிதுறை வாநிறைபொன் அணியக் கருதுநின் றார்பலர் மேன்மேல் அயலவரே. |
195 |
கொளு படைத்துமொழி கிளவில் பணிமொழிப் பாங்கி அடற்கதிர் வேலோற்(கு) அறிய உரைத்தது. |
3. பொன்னணி உரைத்தல்
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் ஓதியைநற் காப்பணிந் தார்பொன் அணிவார் இனிக்கமழ் பூந்துறைவ கோப்பணிவான் தோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி மாப்பணி லங்கள் முழுங்கத் தழங்கும் மணமுரசே. |
196 |
கொளு பலபரி சினமலும் மலர்நெடுங் கண்ணியை நன்னுதற் பாங்கி பொன்னணிவர் என்றது. |
4. அருவிலை உரைத்தல்
எலும்பால் அணியிறை அம்பலத் தோன்எல்லை செல்குறுவோர் நலம்பா வியமுற்றும் நல்கினும் கல்வரை நாடர்அம்ம சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பல்ஒட்டார் கலம்பா வியமுலை யின்விலை என்நீ கருதுவதே. |
197 |
கொளு பேதையர் அறிவு பேதைமை உடைத்தென ஆதரத் தோழி அருவிலை உரைத்தது. |
5. அருமை கேட்டழிதல்
விசும்புற்ற திங்கட்(கு) அழும்மழப் போன்(று)இனி விம்மிவிம்மி அசும்புற்ற கண்ணோ(டு) அலறாய் கிடந்(து)அரன் தில்லையன்னாள் குயம்புற் றர(வு)இடை கூர்எயிற்(று) ஊறல் குழல்மொழியின் நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. |
198 |
கொளு பெருமை நாட் டத்தவள் அருமைகேட்(டு) அழிந்தது. |
6. தளர்வறிந்துரைத்தல்
மைதயங் கும்திரை வாரியை நோக்கி மடல்அவிழ்பூங் கைதை அங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்(டு)எங் கண்டர்தில்லைப் பொய்தயங் கும்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள் பைதயங் கும்அர வம்புரை யும்அல்குல் பைந்தொடியே. |
199 |
கொளு தண்துறைவன் தளர்வறிந்து கொண்டு நீங்கெனக் குறித்துரைத்தது. |
7. குறிப்புரைத்தல்
மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற் கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறி யேன் பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாள்என்னைப் புல்லிக்கொண்டு பாவைதந் தாள்பைங் கிளியளித் தாள்இன்றென் பைந்தொடியே. |
200 |
கொளு நறைக் குழலி குறிப்புரைத்தது. |
8. அருமை உரைத்தல்
மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக் கல்லியல் வெம்மைக் கடங்கடும் தீக்கற்று வானம்எல்லாம் சொல்லிய சீர்ச்சுடர் திங்கள் அங் கண்ணித்தொல் லோன்புலியூர் அல்லியங் கோதைநல் லாய்எல்லை சேய்த்துஎம் அகல்நகரே. |
201 |
கொளு கானின் கடுமையும் மானின் மென்மையும் பதியின் சேட்சியும் இதுவென உரைத்தது. |
9. ஆதரங் கூறல்
பிணையும் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே இணையும் அளவும் இல் லாஇறை யோன்உறை தில்லைத்தண்பூம் பணையும் தடமும்அன் றேநின்னோ(டு) ஏகின்எம் பைந்தொடிக்கே. |
202 |
கொளு அழல்தடம் புரையும் அருஞ்சுரம் அதுவும் நிழல்தடம் அவட்கு நின்னொ(டு)ஏகின் என்றது. |
10. இறந்துபாடு உரைத்தல்
இங்(கு)அயல் என்நீ பணிக்கின்ற(து) ஏந்தல் இணைப்பதில்லாக் கங்கைஅம் செஞ்சடைக் கண்ணுதல் அண்ணல் கடிகொள்தில்லைப் பங்கயப் பாசடைப் பாய்தடம் நீஅப் படர்தடத்துச் செங்கயல் அன்றே கருங்கயல் கண்ணித் திருநுதலே. |
203 |
கொளு கார்த் தடமும் கயலும் போன்றீர் வார்த்தட முலையும் மன்னனும் என்றது. |
11. கற்பு நலன் உரைத்தல்
தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்(கு)அந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் தோளி திண் கற்பின் விழுமிதன்(று)ஈங் கோயில் சிறந்துசிற் றம்பலத்(து) ஆடும்எம் கூத்தப்பிரான் வாயில் சிறந்த மதியில் சிறந்த மதிநுதலே. |
204 |
கொளு பொய்யத்தஇடை போக்குத்துணிய வையத்திடை வழக்குரைத்தது. |
12. துணிந்தமை கூறல்
குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய் நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர் மறப்பான் அடுப்பதோர் தீவினை வந்திடின் சென்றுசென்று பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன் னத்தகும் பெற்றியரே. |
205 |
கொளு பொருவேல் அண்ணல் போக்குத் துணிந்தமை செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது. |
13. துணிவொடு வினாவல்
நிழல்தலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும் அழல்தலை வெம்பரற் றென்பர்என் னோதில்லை அம்பலத்தான் கழல்தலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போல் குழல்தலைச் சொல்லிசெல் லக்குறிப் பாகும் நம்கொற்றவர்க்கே. |
206 |
கொளு சிலம்பன் துணிவொடு செல்கரம் நினைந்து கலம்புனை கொம்பர் கலக்க முற்றது. |
14. போக்கு அறிவித்தல்
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பல வன்கயிலைச் சீயமும் மாவும் வெரீஇவரல் என்பல் செறிதிரைநீர்த் தேயமும் யாவும் பெறினும் கொடார்நமர் இன்னசெப்பில் தோயமும் நாடும்இல் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே. |
207 |
கொளு பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை அரிவைக்(கு) அவள் அறிய உரைத்தது. |
15. நாணிழந்து வருந்தல்
மற்பாய் விடையோன் மகிழ்புலி யூர்என் னொடும்வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. |
208 |
கொளு கற்பு நாணினும் முற்சிறந் தமையின் சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது. |
16. துணிவெடுத்து உரைத்தல்
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுரம் ஆகும்நம்பா அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்(டு)அரி சிந்துகண்ணாள் செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. |
209 |
கொளு செல்வ மாதர் செல்லத் துணிந்தமை தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது. |
17. குறியிடங் கூறல்
முன்னோன் மணிகண்டம் ஒத்தவன் அம்பலம் தம்முடிதாழ்த்(து) உன்னா தவர்வினை போல்பரந்(து) ஓங்கும் எனதுயிரே அன்னாள் அரும்பெறல் ஆவியன் னாய்அருள் ஆசையினால் பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. |
210 |
கொளு மன்னிய இருளில் துன்னிய குறியில் கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது. |
18. அடியடு வழிநினைந்(து) அவன் உளம் வாடல்
பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர் அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல்பழுத்த கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால் இனிச் சந்த மேகலை யாட்(கு)என்கொ லாம்புகுந்(து) எய்துவதே. |
211 |
கொளு நெறியுறு குழலியடு நீங்கத் துணிந்த உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது. |
19. கொண்டு சென்று உய்த்தல்
வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல்உள்ளம் தெய்வம் தரும்இருள் தூங்கும் முழுதும் செழுமிடற்றின் மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் மொய்வந்த வாவி தெளியும் துயிலும்இம் முதெயிலே. |
212 |
கொளு வண்டமர் குழலியைக் கண்டுகொள் கென்றது. |
20. ஒம்படுத் துரைத்தல்
பறந்திருந்(து) உம்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்(து)எரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா அறம்திருந்(து) உன்னரு ளும்பிறி தாயின் அருமறையின் திறம்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றும்இச் சேணிலத்தே. |
213 |
கொளு தேம்படு கோதையை ஓம்ப டுத்தது. |
21. வழிப்படுத்துரைத்தல்
ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் ஒர்கவ்வைதீர்த்(து) ஆண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின்(று) ஆண்டெல்லை தீர்இன்பம் தந்தவன் சிற்றம் பலம்நிலவு சேண்தில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. |
214 |
கொளு மதிநுதலியை வழிப்படுத்துப் பதிவயிற் பெயரும் பாங்கி பகர்ந்தது. |
22 மெல்லக் கொண்டேகல்
பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம் பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும் மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும் காணத் திருத்திய போலும் முன் னாமன்னு கானங்களே. |
215 |
கொளு பஞ்சி மெல்லடிப் பணைத் தோளியை வெஞ்சுரத்திடை மெலிவு அகற்றியது. |
23. அடலெடுத்துரைத்தல்
கொடித்தேர் மறவர் சூழாம்வெங் கரிநிரை கூடின்என்கை வடித்தேர் இலங்கெ·தின் வாய்க்குத வாமன்னும் அம்பலத்தோன் அடித்தேர் அலரென்ன அஞ்சுவன் நின்ஐயர் என்னின்மன்னும் கடித்தேர் குழன்மங்கை கண்டி(டு)இவ் விண்தோய் கனவரையே. |
216 |
கொளு வரிசிலையவர் வருகுவரெனப் புரிதரு குழலிக்(கு) அருளுவன் உரைத்தது. |
24. அயர்வு அகற்றல்
முன்னோன் அருள்முன்னும் உன்னா வினையின் முகர்துன்னும் இன்னாக் கடறி(து)இப் போழ்தே கடந்தின்று காண்டும்சென்று பொன்னார் அணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார் தென்னா எனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. |
217 |
கொளு இன்னல் வெங்க டந்தெறி வேலவன் அன்னம் அன்னவள் அயர்(வு)அ கற்றியது. |
25. நெறி விலக்கிக் கூறல்
விடலைஉற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ மடலையுற் றார்குழல் வாடினள் மன்றுசிற் றம்பலவர்க்கு அடலையுற் றாரின் எறிப்(பு)ஒழிந் தாங்(கு)அருக் கன்கருக்கிக் கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே. |
218 |
கொளு சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு சரத்தணி வில்லோய் தங்கு கென்றது. |
26. கண்டவர் மகிழ்தல்
அன்பணைத்(து) அம்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்தன் பின்பணைத் தோளி வரும்இப் பெருஞ்சுரம் செல்வதன்று பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல் நன்பணைத் தண்ணற(வு) உண்அளி போன்றொளிர் நாடகமே. |
219 |
கொளு மண்டழற் கடத்துக் கண்டவர் உரைத்தது. |
27. வழிவிளையாடல்
கண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின் பண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே விண்கள்தம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கன்எங்கோன் தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே. |
220 |
கொளு வன்தழற் கடத்து வடிவேல் அண்ணல் மின்தங்(கு) இடையடு விளையாடி யது. |
28. நகரணிமை கூறல்
மின்தங்(கு) இடையடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர் குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குரூஉக்கமலம் துன்(று)அம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார் சென்(று)அங்(கு) அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே. |
221 |
கொளு வண்டமர் குழலியடு கண்டவர் உரைத்தது. |
29. நகர் காட்டல்
மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப் பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர் மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய் நின்போல் நடைஅன்னம் துன்னிமுன் தோன்றும்நல் நீள்நகரே. |
222 |
கொளு கொடுங்கடம் கடந்த குழைமுக மாதர்க்குத் தடம்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது. |
30. பதிபரிசுரைத்தல்
செய்குன்(று) உவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற திங்கள்எய்ப்(பு) ஆறும் பொழில்அவை ஞாங்கர்எங்கும் பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும் எய்குன்ற வார்சிலை அம்பல வற்(கு)இடம் ஏந்திழையே. |
223 |
கொளு கண்ணிவர் வளநகர் கண்டுசென்(று(அடைந்து பண்ணிவர் மொழிக்குப் பதிபரி(சு)உரைத்தது. |
31. செவிலி தேடல்
மயிலெனப் பேர்ந்(து)இள வல்லியின் ஒல்கிமென் மான்விழித்துக் குயிலெனப் பேசும்எங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய் அயிலெனப் பேருங்கண் ணாய்என் கொலாம்இன்(று) அயர்கின்றதே. |
224 |
கொளு கவலை யுற்ற காதல் தோழியைச் செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது. |
32. அறத்தொடு நிற்றல்
ஆளரிக் கும்அரி தாய்த்தில்லை யாவருக் கும்எளிதாம் தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேல் கோளரிக் கும்நிகர் அன்னார் ஒருவர் குரூஉமலர்த்தார் வாளரிக் கண்ணிகொண் டாள்வண்டல் ஆயத்(து)எம் வாணுதலே. |
225 |
கொளு சுடர்க்குழைப் பாங்கி படைத்துமொழி கிளவியல் சிறப்புடைச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. |
33. கற்பு நிலைக்கு இரங்கல்
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக் கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளர மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற்(று) எடுத்தாற்(கு) இனியன வேயினி யாவன எம்மனைக்கே. |
226 |
கொளு விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக் கோடா யுள்ள நீடாய் அழுங்கியது |
34. கவன்றுரைத்தல்
முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச் சிறுவலக் காரங்கள் செய்தஎல் லாம்முழு தும்திதையத் தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார் உறுவலக் கானகம் தான்படர் வானாம் ஒளியிழையே. |
227 |
கொளு அவள் நிலை நினைந்து செவிலி கவன்றது. |
35. அடிநினைந்திரங்கல்
தாமே தமக்(கு)ஒப்பு மற்றில் லவர்தில்லைத் தண்அனிச்சப் பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும்நங் காய் எரியும் தீமேல் அயில்போல் செறிபரல் கானிற் சிலம்படியாய் ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே. |
228 |
கொளு வெஞ்சுரமும் அவள் பஞ்சுமெல் அடியும் செவிலி நினைந்து கவலை யுற்றது. |
36. நற்றாய்க்கு உரைத்தல்
தழுவின கையிறை சோரின் தமியம்என் றேதளர்வுற்(று) அழுவினை செய்யும்நை யாஅம்சொல் பேதை அறிவுவிண்ணோர் குழுவினை உய்யநஞ் சுண்(டு)அம் பலத்துக் குனிக்கும்பிரான் செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே. |
229 |
கொளு முகிழ்முலை மடந்தைக்கு முன்னிய(து) அறியத் திகழ்மனைக் கிழத்திக்குச் செவிலி செப்பியது. |
37. நற்றாய் வருந்தல்
யாழியல் மென்மொழி வன்மனப் பேதையர் ஏதிலம்பின் தோழியை நீத்(து)என்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே வாழிஇம் மூதூர் மறுகச்சென் றாள்அன்று மால்வணங்க ஆழிதந் தான்அம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. |
230 |
கொளு கோடாய் கூற நீடாய் வாடியது. |
38. கிளி மொழிக்கு இரங்கல்
கொன்னுனை வேல்அம் பலவன் தொழாரின்குன் றம்கொடியோள் என்னணம் சென்றனள் என்னணம் சேரும் எனஅயரா என்னனை போயினள் யாண்டையள் என்னைப் பருந்தடும்என்(று) என்னனை போக்கன்றிக் கிள்ளைஎன் உள்ளத்தை ஈர்க்கின்றதே. |
231 |
கொளு மெய்த்தகை மாது வெஞ்சுரம் செல்லத் தத்தையை நோக்கித் தாய்புலம் பியது. |
39. சுடரோடு இரத்தல்
பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு நற்றேள் மொழியழல் கான்நடந் தாள்முகம் நானணுகப் பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு மற்றேன் மலரின் மலர்த்(து)இரந் தேன்சுடர் வானவனே. |
232 |
கொளு வெஞ்சுரத் தணிக்கெனச் செஞ்சுடர் அவற்கு வேயமர் தோளி தாயர் பராயது. |
40. பருவம் நினைந்து கவறல்
வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யும்குற் றேவல்மற்றென் மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாம்தில்லை யான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்(று) எண்ணித்துண் ணென்றொளித்துக் கைம்மல ரால்கண் புதைத்துப் பதைக்கும்எம் கார்மயிலே. |
233 |
கொளு முற்றா முலைக்கு நற்றாய் கவன்றது. |
41. நாடத் துணிதல்
வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத் தீயின(து) ஆற்றல் சிரம்கண்இழிந்து திசைதிசைதாம் போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே. |
234 |
கொளு கோடாய் மடந்தையை நாடத் துணிந்தது. |
42. கொடிக்குறி பார்த்தல்
பணங்கள்அஞ் சாலும் பருஅர(வு) ஆர்த்தவன் தில்லையன்ன மணங்கொள்அஞ் சாயலும் மன்னனும் இன்னஏ வரக்கரைந்தால் உணங்கல்அஞ் சா(து)உண்ண லாம்ஒள் நிணப்பலி ஒக்குவல்மாக் குணங்கள்அஞ் சாற்பொலி யும்நல சேட்டைக் குலக்கொடியே. |
235 |
கொளு நற்றாய் நயந்து சொற்புட் பராயது. |
43. சோதிடங் கேட்டல்
முன்னும் கடுவிடம் உண்டதென் தில்லைமுன் னோன்அருளால் இன்னும் கடியிக் கடிமனைக் கேமற்(று) யாம்அயர மன்னும் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறும்உண்டேல் உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே. |
236 |
கொளு சித்தம் தளர்ந்து தேடும் கோடாய் உய்த்துணர் வோரை உரைமின் என்றது. |
44. சுவடு கண்டறிதல்
தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலம்சிந்தி யார்இனஞ்சேர் முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேன்எடுத்த ஒள்வன் படைக்கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அக் கள்வன் பகட்டுர வோன்அடி யென்று கருதுவனே. |
237 |
கொளு சுவடுபடு கடத்துச் செவிலி கண் டறிந்தது. |
45. சுவடு கண்டிரங்கல்
பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க் கோலத் தவிசின் மிதிக்கின் பதைத்தடி கொப்புள்கொள்ளும் வேலொத்த வெம்பரல் கானத்தின் நின்றோர் விடலைபின்போம் காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே. |
238 |
கொளு கடத்திடைக் காரிகை அடித்தலம் கண்டு மன்னருள் கோடாய் இன்னல் எய்தியது. |
46. வேட்ட மாதரைக் கேட்டல்
பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றில் எனைப்பிரிந்தால் ஊதைக்(கு) அலமரும் வல்லியப் பாள்முத்தன் தில்லையன்னாள் ஏதிற் கரத்தய லானொ(டு)இன்(று) ஏகினள் கண்டனையே போதிற் பொலியும் தொழிற்புலிப் பல்குரல் பொற்றொடியே. |
239 |
கொளு மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப் பின்வரு செவிலி பெற்றி வினாயது. |
47. புறவொடு புலத்தல்
புயலன்(று) அலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி பயலன் தலைப்பணி யாதவர் போல்மிகு பாவம்செய்தேற்(கு) அயலன் தமியன்அம் சொல்துணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன்(று) எனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே. |
240 |
கொளு காட்டுப் புறவொடு வாட்டம் உரைத்தது. |
48. குரவொடு வருந்தல்
பாயும் விடையோன் புலியூர் அனையஎன் பாவைமுன்னே காயும் கடத்திடை யாடிக் கடப்பவும் கண்டுநின்று வாயும் திறவாய் குழைஎழில் வீசவண்(டு) ஓலுறுத்த நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே. |
241 |
கொளு தேடிச் சென்ற செவிலித் தாயர் ஆடற் குரவொடு வாடி உரைத்தது. |
49. விரதியரை வினாவல்
கத்திய பொக்கணத்(து) என்(பு)அணி கட்டங்கம் சூழ்சடைவெண் பொத்திய கோலத்தி னீர்புலி யூர்அம் பலவர்க்குற்ற பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர் பித்திதன் பின்வர முன்வரு மோஓர் பெருந்தகையே. |
242 |
கொளு வழிவரு கின்ற மாவிர தியரை மொழிமின்கள் என்று முன்னி மொழிந்தது. |
50. வேதியரை வினாவல்
வெதிரேய் கரத்துமென் தோல்ஏய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ அதிரேய் மறையின்இவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக் கதிரேய் சடையோன் கரமான் எனஒரு மான்மயில்போல் எதிரே வருமே சுரமே வெறுப்பவொர் ஏந்தலோடே. |
243 |
கொளு மாதின்பின் வரும்செவிலி வேதியரை விரும்பி வினாவியது. |
51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
மீண்டார் எனஉவந் §ன்கண்டு நும்மைஇம் மேதகவே பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்(று) ஆண்டான் அருவரை ஆளியன் னாளுக்கண்டேன்அயலே தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே. |
244 |
கொளு புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால் அணங்கமர் கோதையை ஆராய்ந்தது. |
52. வியந்துரைத்தல்
பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத் தீங்கை இலாச்சிறி யாள்நின்ற(து) இவ்விடம் சென்றெதிர்ந்த வேங்கையின் வாயின் வியன்னகம் மடுத்துக் கிடந்தலற ஆங்(கு)அயி லாற்பணி கொண்டது திண்திறல் ஆண்தகையே. |
245 |
கொளு வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும் நாடா வரும் கோடாய் கூறியது. |
53. இயைபு எடுத்துரைத்தல்
மின்தொத்(து) இடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன ஒன்(று)ஒத் திடவுடை யாள(டு)ஒன் றாம்புலி யூரன்என்றே நன்(று)ஒத் தெழிலைத் தொழவுற் றனம்என்ன தோர்நன்மைதான் குன்றத் திடைக்கண் டனம்அன்னை நீசொன்ன கொள்கையரே. |
246 |
கொளு சேயிழை யோடு செம்மல் போதர ஆயிழை பங்கன்என்(று) அயிர்த்தேம் என்றது. |
54. மீள உரைத்தல்
மீள்வது செல்வதன்(று) அன்னைஇவ் வெங்கடத்(து) அக்கடமாக் கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன நீள்வது செய்தகண் ணாள்இந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. |
247 |
கொளு கடுங்கடம் கடந்தமை கைத்தாய்க்(கு) உரைத்து நடுங்கன்மின் மீண்டும் நடமின் என்றது. |
55. உலகியல்பு உரைத்தல்
கரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்எங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்(கு)அணி யாம்வியன் கங்கையென்னும் பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய கரும்பன மென்மொழி யாரும்அந் நீர்மையர் காணுநர்க்கே. |
248 |
கொளு செவிலியது கவலை தீர மன்னிய உலகியல் முன்னி உரைத்தது. |
56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்
ஆண்(டு)இல் எடுத்தவ ராம்இவர் தாம்அவர் அல்குவர்போய்த் தீண்டில் எடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த் தூண்டில் எடுத்தவ ரால்தொங்கொ(டு) எற்றப் பழம்விழுந்து பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்களே. |
249 |
கொளு செழும்பணை அணைந்தமை அழுங்கு தாய்க்(கு) உரைத்தது. |
உடன் போக்கு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினாறாம் அதிகாரம் , கொளு, உரைத்தது, உரைத்தல், செவிலி, கூறல், என்றது, கோடாய், தோளி, பாங்கி, கண்டவர், திருத்திய, வினாவல், நினைந்து, துணிந்தமை, அருமை, அண்ணல், கற்பு, நற்றாய், அவள், கானகம், திருமுறை, போக்குத், கவலை, அறிய, பதினாறாம், மென்மொழி, போக்கு, வருந்தல், அதிகாரம், சிற்றம், சீறடி, பதைத்தடி, தில்லைப், மிதிக்கின், கவன்றது, இரங்கல், அறத்தொடு, இடையடு, நீடாய், வினாயது, மின்தங், தில்லையின், என்னனை, புறவொடு, வேட்ட, சுவடு, குரவொடு, முன்னி, எடுத்தவ, அழுங்கு, வேதியரை, கேட்டல், போயின, இன்னல், என்னணம், பலவன், வெஞ்சுரம், தாயர், நாடத், பருவம், பராயது, யேன்பெற்ற, பொன்னார், பைந்தொடியே, நின்று, தில்லையன்னாள், கொண்டு, மெல்லியல், தீவினை, சிறந்த, மன்னனும், பேதையர், என்நீ, உடன், திருக்கோவையார், எட்டாம், தில்லையன், படைத்துமொழி, அம்பலத், அருவிலை, சென்று, செப்பியது, வாடியது, குழலியடு, சூடும், வாவி, வண்டமர், கோதையை, கென்றது, மன்னிய, உன்னா, விடையோன், வேலவன், துணிவொடு, வாழி, துணிந்தது, முன்னோன், செல்லத், சேரும்