எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினைந்தாம் அதிகாரம்
பதினைந்தாம் அதிகாரம்
15. ஒருவழித் தணத்தல்
பேரின்பக் கிளவி
ஒருவழித் தணத்தல் ஒருபதின் மூன்றும் சிவனது கருணை அருள்தெரி வித்தது. |
1. அகன்று அணைவு கூறல்
புகழும் பழியும் பெருக்கில் பெருகும் பெருகிநின்று நிகழும் நிகழா நிகழ்த்தின்அல் லால்இது நீநினைப்பின் அகழும் மதிலும் அணிதில்லை யோன்அடிப் போதுசென்னித் திகழும் அவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. |
181 |
கொளு வழிவேறு படமன்னும் பழிவேறு படும்என்றது. |
2. கடலொடு வரவு கேட்டல்
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச் சீரம் பரத்தின் திகழ்ந்தொளி தோன்றும் துறைவர்சென்றார் போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன் சீரம்பல் சுற்றி எற்றிச் சிறந்தார்க்கும் செறிகடலே. |
182 |
கொளு மணந்தவர் ஒருவழித் தணந்ததற்(கு) இரங்கி மறிதிரை சேரும் எறிகடற்(கு) இயம்பியது. |
3. கடலொடு புலத்தல்
பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்தரு வெண்கிழிதம் சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள் வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய் பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. |
183 |
கொளு செறிவளைச் சின்மொழி எறிகடற்(கு) இயம்பியது. |
4. அன்னமோடு ஆய்தல்
பகன்தர மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்(து) அகன்தா மரையென்ன மேவண்டு நீல மணியணிந்து முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்உரையாது அகன்றார் அகன்றே ஒழிவர்கொல் லோநம் அகன்துறையே. |
184 |
கொளு மின்னடை மடந்தை அன்னமோ(டு) ஆய்ந்தது. |
5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட் கொள்ளும் அவரிலோர் கூட்டம்தந் தான்குனி கும்புலியூர் விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரல்கண்டாய் புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. |
185 |
கொளு மீன்தோய் துறைவர் மீளும் அளவும் மான்தேர் வழியை அழியேல் என்றது. |
6. கூடல் இழைத்தல்
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்(து) ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்(று) ஆழி திருத்திச் சுழிக்கணக்(கு) ஓதிநை யாமல்ஐய வாழி திருத்தித் தரக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே. |
186 |
கொளு நீடலந் துறையில் கூடல் இழைத்தது. |
7. சுடரொடு புலம்பல்
கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர் போர்த்த(ரு)அங் கம்துறைமானும் துறைவர்தம் போக்குமிக்க தீர்த்தர்அங் கன்தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும் ஆர்த்தர் அங் கம்செய்யு மால்உய்யு மா(று)என்கொல் ஆழ்சுடரே. |
187 |
கொளு குணகடல் எழுசுடர் குடகடல் குளிப்ப மணமலி குழலி மனம்புலம் பியது. |
8. பொழுது கண்டு மயங்கல்
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றவர்க்குப் புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோன்எவ ரும்புகலத் தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால் அகலோங்(கு) இருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. |
188 |
கொளு மயல்தரு மாலை வருவது கண்டு கயல்தரு கண்ணி கவலை யுற்றது. |
9. பறவையடு வருந்தல்
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னும் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய் இன்னும் அறிகில வால்என்னை பாவம் இருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. |
189 |
கொளு செறிபிணி கைம்மிகச் சிற்றிடை பேதை பறவைமேல் வைத்துப் பையுள்எய் தியது. |
10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
கருங்கழி காதல்பைங் கானவில் தில்லைஎம் கண்டர்விண்டார் ஒருங்கழி காதர மூவெயில் செற்றஒற் றைச்சிலைசூழ்ந்(து) அருங்கழி காதம் அகலும்என் றூழ்என்(று) அலந்துகண்ணீர் வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. |
190 |
கொளு முருகவிழ் கானல் ஒடுபரி வுற்றது. |
11 அன்னமோடு அழிதல்
மூவல் தழீஇய அருள்முத லோன்தில்லைச் செல்வன்முந்தீர் நாவல் தழீஇயஇந் நானிலம் துஞ்சும் நயந்த இன்பச் சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிர்எம் காவல் தழீஇயவர்க்(கு) ஓதா(து) அளிய களியன்னமே. |
191 |
கொளு இன்ன கையவள் இரவரு துயரம் அன்னத்தோ(டு) அழிந்துரைத்தது. |
12. வரவு உணர்ந்து உரைத்தல்
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலது கல்லா கதிர்முத்தம் காற்றும் எனக்கட் டுரைக்கதில்லைத் தொல்லோன் அருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய் எல்லார் மதியே இதுநின்னை யான்இன்(று) இரக்கின்றதே. |
192 |
கொளு சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத்(து) உரைத்தது. |
13. வருத்தமிகுதி கூறல்
வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்(கு)இடமாய்த் தளரும் தடவரைத் தண்சிலம் பாதன(து) அங்கம்எங்கும் விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்(று) ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே. |
193 |
கொளு நீங்கி அணைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது. |
ஒருவழித் தணத்தல் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினைந்தாம் அதிகாரம் , கொளு, ஒருவழித், கூறல், கடலொடு, திருமுறை, தணத்தல், அதிகாரம், பதினைந்தாம், புலியூர், திருத்தும், கண்டு, உரைத்தல், கூடல், பாங்கி, வரவு, திருக்கோவையார், எட்டாம், எறிகடற், இயம்பியது, அன்னமோடு, தேர்வழி