எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினொன்றாம் அதிகாரம்
பதினொன்றாம் அதிகாரம்
11. குறை நயப்புக் கூறல்
பேரின்பக் கிளவி
குறைநயப் புத்துறை அவை இரு நான்கும் சிவந்தோ(டு) உயிரைச் சேர்க்க வேண்டி உயிர்ப்பரிவு எடுத்தெடுத்(து) உரைத்(து)அறி உறுத்தல். |
1. குறிப்பறிதல்
தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகித் தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின் வேல்ஒருவர் மாதே புனத்திடை வாளா மருவர்வந்(து) யாதும்சொல்லார் யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்தியே. |
82 |
கொளு நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்(கு) உள்ளறி குற்ற ஒள்ளிழை யுரைத்தது. |
2. மென்மொழியால் கூறல்
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ எரிசேர் தளிரென்ன மேனியென் ஈர்ந்தழை யன்புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத் தெரியேம் உரையன் பிரியான் ஒருவன்இத் தேம்புனமே. |
83 |
கொளு ஒளிருறு வேலவன் தளர்வறு கின்றமை இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது. |
3. விரவிக் கூறல்
நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான் சேய்கண் டனை யன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின் வாய்கண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண்(டு) அனையதொன் றாகிநின் றான்அப் பெருந்தகையே. |
84 |
கொளு வன்மொழியன்மனம் மெலிவ(து) அஞ்சி மென்மொழி விரவி மிகுந்து ரைத்தது. |
4. அறியாள் போறல்
சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. |
85 |
கொளு அறியாள் போன்று குறியாள் கூறியது. |
5. வஞ்சித்து உரைத்தல்
புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து) இரங்கி(டு)எந் தாய்என்(று) இரப்பத்தன் ஈரடிக்(கு) என்இரண்டு கரங்கள்தந் தான் ஒன்று காட்டமற்(று) ஆங்கதும் காட்டிடென்று வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே. |
86 |
கொளு நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித்(து) இவையிவை செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்(கு) உரைத்தது. |
6. புலந்து கூறல்
உள்ளப் படுவன வுள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து மெள்ளப் படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான் கள்ளப் படிறர்க்(கு) அருளா அரன்தில்லை காணலர்போல் கொள்ளப் படாது மறப்ப(து) அறிவிலென் கூற்றுக்களே. |
87 |
கொளு திருந்திய சொல்லில் செவ்வி பெறாது வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது. |
7. வன்மொழியாற் கூறல்
மேவிஅம் தோல் உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில் ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்(று) உரையுளதால் தூவியம் தோகையன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான் பாவிஅந் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே. |
88 |
கொளு கடல்உல(கு) அறியக் கமழலந் துறைவன் மடலே றும்என வன்மொழி மொழிந்தது. |
8. மனத்தொடு நேர்தல்
பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய் என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார் சொன்னார் எனும்இத் துரிகதுன் னாமைத் துணைமனனே என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே. |
89 |
கொளு அடல்வேலவன் ஆற்றானெனக் கடல்அமிழ் தன்னவன் காணல் உற்றது. |
குறை நயப்புக் கூறல் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினொன்றாம் அதிகாரம் , கொளு, கூறல், திருமுறை, அதிகாரம், பதினொன்றாம், மொழிந்தது, மென்மொழி, அறியாள், சடையோன், ரைத்தது, குறைநயப், குறை, நயப்புக், திருக்கோவையார், எட்டாம்