ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.085.திருக்கூடலையாற்றூர்
7.085.திருக்கூடலையாற்றூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச் சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய் நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர் மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர்.
தேவியார் - புரிகுழலாளம்மை.
862 |
வடியுடை மழுவேந்தி பொடியணி திருமேனிப் கொடியணி நெடுமாடக் அடிகள்இவ் வழிபோந்த |
7.085.1 |
கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி, மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு, பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும், கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருநீற்றை யணிந்த பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
863 |
வையக முழுதுண்ட பையர வகலல்குற் கொய்யணி மலர்ச்சோலைக் ஐயன்இவ் வழிபோந்த |
7.085.2 |
உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் பிரமதேவனோடும், அரவப் படம்போலும் அல்குலையுடைய, இளைய, பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி, கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃது என் ஏழைமை இருந்தவாறு!
864 |
ஊர்தொறும் வெண்டலைகொண் வார்தரு மென்முலையாள் கூர்நுனை மழுவேந்திக் ஆர்வன்இவ் வழிபோந்த |
7.085.3 |
ஊர்தோறும் சென்று, வெள்ளிய தலையோட்டை ஏந்தி, 'பிச்சை இடுமின்' என்று இரந்துண்டு, கச்சணிந்த, மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய், கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக்கொண்டு, திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, பேரன்புடையனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
865 |
சந்தண வும்புனலுந் பந்தண வும்விரலாள் கொந்தண வும்பொழில்சூழ் அந்தணன் வழிபோந்த |
7.085.4 |
பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற, நீண்ட சடைமுடியையுடையவனாய், பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய, பாவைபோலும் உமையோடும் உடனாகி, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருச்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
866 |
வேதியர் விண்ணவரும் சோதிய துருவாகிச் கோதிய வண்டறையுங் ஆதிஇவ் வழிபோந்த |
7.085.5 |
அந்தணரும், தேவரும், மக்களும் வணங்கி நிற்க, நல்ல ஒளியுருவமாய், சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
867 |
வித்தக வீணையொடும் முத்தன வெண்முறுவல் கொத்தல ரும்பொழில்சூழ் அத்தன்இவ் வழிபோந்த |
7.085.6 |
தான் வல்லதாகிய வீணையோடும், வெள்ளிய முப்புரி நூலை அணிந்து, முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி, பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை, இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
868 |
மழைநுழை மதியமொடு இழைநுழை துகிலல்குல் குழையணி திகழ்சோலைக் அழகன்இவ் வழிபோந்த |
7.085.7 |
மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும், கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து, நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும், தாங்கிய அணிகலங்களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி, தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகன், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு!
869 |
மறைமுதல் வானவரும் பிறைநுதல் மங்கையொடும் குறள்படை யதனோடுங் அறவன்இவ் வழிபோந்த |
7.085.8 |
வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க, பிறைபோலும் நெற்றியையுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு!
870 |
வேலையின் நஞ்சுண்டு பாலன மென்மொழியாள் கோலம துருவாகிக் ஆலன்இவ் வழிபோந்த |
7.085.9 |
கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து, பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமாதேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக்கொண்டு, திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு!
871 |
கூடலை யாற்றூரிற் ஆட லுகந்தானை நாடிய இன்றமிழால் பாடல்கள் பத்தும்வல்லார் |
7.085.10 |
திருக்கூடலையாற்றூரில், கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும், அருள் விளையாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, 'அவன் செய்த இச்செயல் அதிசயம்' என்று சொல்லி, ஆராய்ந்த இனிய தமிழால், திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.085.திருக்கூடலையாற்றூர் , அதிசயம், யாற்றூரில், கூடலை, எழுந்தருளியிருக்கின்ற, அடியேன், இருந்தவாறு, வியத்தகு, அறியேனே, உமாதேவியோடும், வழிபோந்த, செயலை, என்முன், இஃதே, வந்த, ஏழைமை, இவ்வழியிடை, திருக்கூடலையாற்றூரில், அறியாதே, யொழிந்தேன், டும்முடனே, அறியாதேயொழிந்தேன், உடனாகி, பெருமான், வெள்ளிய, பாவையொ, பொருந்திய, திருமுறை, திருக்கூடலையாற்றூர், இந்திரனும், அறியாமை, இனிய, தேவரும், சூழ்ந்த, தாங்கிய, அழகு, மங்கையொ, ஏழாம், திருச்சிற்றம்பலம், உயர்ந்த, கூந்தலையுடைய, ஏந்தி, சொல்லி, பதிகங்கள், தேவாரப், சோலைகளையுடைய, அழகிய, பாவைபோலும், லுமையோடும், திருக்கூடலை