ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.080.திருக்கேதீச்சரம்
7.080.திருக்கேதீச்சரம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேதீசுவரர்.
தேவியார் - கௌரியம்மை.
812 |
நத்தார்படை ஞானன்பசு மத்தம்மத யானையுரி பத்தாகிய தொண்டர்தொழு செத்தாரெலும் பணிவான்திருக் |
7.080.1 |
விரும்புதல் பொருந்திய பூதப் படைகளையுடைய ஞான உருவினனும், இடபத்தை ஏறுகின்றவனும், நனைய ஒழுகுகின்ற இடங்களில் மயக்கத்தைத் தரும் மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்த மணவாளக் கோலத்தினனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளிய பெருமான், அன்பர்களாகிய அடியவர்கள் வணங்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், இறந்தவர்களது எலும்பை அணிபவனாகக் காணப்படுகின்றான்.
813 |
சுடுவார்பொடி நீறுந்நல கடமார்களி யானையுரி படவேரிடை மடவாளொடு திடமாஉறை கின்றான்திருக் |
7.080.2 |
சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும், நல்ல பிளவாகிய பிறையையும், கீளினையும், மதம் நிறைந்த மயக்கத்தையுடைய, யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான், பாலாவி யாற்றின் கரைமேல், பாம்பு போலும் இடையினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான்.
814 |
அங்கம்மொழி யன்னாரவர் வங்கம்மலி கின்றகடல் பங்கஞ்செய்த பிறைசூடினன் செங்கண்ணர வசைத்தான்திருக் |
7.080.3 |
பிளவு செய்த பிறையைச் சூடினவனாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வேதத்தின் அங்கங்களைச் சொல்லுகின்ற அத்தன்மையையுடைய அந்தணர்களும், தேவர்களும் வணங்கித் துதிக்க, மரக்கலம் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாலாவி ஆற்றின் கரைமேல், சினத்தாற் சிவந்த கண்ணையுடைய பாம்பைக் கட்டி யுள்ளவனாய்க் காணப்படுகின்றான்.
815 |
கரியகறைக் கண்டன்நல வரியசிறை வண்டியாழ்செயும் பரியதிரை யெறியாவரு தெரியும்மறை வல்லான்திருக் |
7.080.4 |
கருமையாகிய, நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும், நல்ல இருகண்கள்மேலும் மற்றொரு கண்ணையுடையவனும் ஆகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், கீற்றுக்களையுடைய சிறகுகளையுடைய வண்டுகள் யாழின் இசையை உண்டாக்குகின்ற, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பருத்த அலைகளை வீசிக்கொண்டு வருகின்ற பாலாவியாற்றின் கரைமேல், ஆராயத்தக்க வேதங்களை வல்லவனாய்க் காணப்படுகின்றான்.
816 |
அங்கத்துறு நோய்கள்ளடி வங்கம்மலி கின்றகடல் பங்கஞ்செய்த மடவாளொடு தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் |
7.080.5 |
தன் அடியார்கள் மேலனவாய், அவர்களது உடம்பிற் பொருந்துகின்ற நோய்களை முற்றக் களைந்தருள்பவனாகிய சிவபெருமான், மரக்கலங்கள் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், தனது திருமேனியின் ஒரு கூற்றை அழகு செய்கின்ற மங்கை ஒருத்தியுடன், பாலாவி யாற்றின் கரைமேல், தென்னஞ் சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனாய்க் காணப்படுகின்றான்.
817 |
வெய்யவினை யாயவ்வடி வையம்மலி கின்றகடல் பையேரிடை மடவாளொடு செய்யசடை முடியான்திருக் |
7.080.6 |
திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியவர்மேல் உள்ள கொடிய வினைகளாய் உள்ளனவற்றை முற்ற ஒழித்துநின்று, நிலவுலகத்தில் உள்ளார் உணர்ந்து மகிழ நிற்கின்ற, கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நகரத்தில், பாம்பு போலும் இடையினை உடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், சிவந்த சடைமுடியை உடையவனாய்க் காணப்படுகின்றான்.
818 |
ஊனத்துறு நோய்கள்ளடி வானத்துறு மலியுங்கடல் பானத்துறு மொழியாளொடு ஏனத்தெயி றணிந்தான்திருக் |
7.080.7 |
திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தன் அடியார்கள் மேலனவாய், உடம்பிற் பொருந்தும் நோய்களை முற்ற ஒழித்துநின்று, அலைகளால் வானத்தைப் பொருந்துகின்ற, நீர் நிறைந்த கடல் சூழ்ந்த, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பாலும் விரும்பத்தக்க மொழியை யுடையவளாகிய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், பன்றியின் கொம்பை அணிந்தவனாய்க் காணப்படுகின்றான்.
819 |
அட்டன்னழ காகவ்வரை மட்டுண்டுவண் டாலும்பொழில் பட்டவ்வரி நுதலாளொடு சிட்டன்நமை யாள்வான்திருக் |
7.080.8 |
அட்ட மூர்த்தமாய் நிற்பவனாகிய. திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது அரையில் பாம்பினை அழகாகக் கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரிக்கின்ற சோலைகளையுடைய 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை யணிந்த அழகிய நெற்றியை உடைய ஒருத்தியோடு, பாலாவி யாற்றின் கரைமேல், மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் காணப்படுகின்றான்.
820 |
மூவரென இருவரென மாவின்கனி தூங்கும்பொழில் பாவம்வினை யறுப்பார்பயில் தேவன்எனை ஆள்வான்திருக் |
7.080.9 |
மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய, திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாமரங்களின் கனிகள் தாழத் தூங்குகின்ற சோலைகளையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தில் பாவத்தையும், இருவினைகளையும் அறுக்க விரும்புவோர் பலகாலும் வந்து மூழ்குகின்ற பாலாவியாற்றின் கரைமேல், மூவராகியும், இருவராகியும், முதற்கடவுளாகியும் நின்று, என்னை ஆள்பவனாய்க் காணப்படுகின்றான்.
821 |
கரையார்கடல் சூழ்ந்தகழி சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் மறையார்புகழ் ஊரன்னடித் குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் |
7.080.10 |
கறுப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த, கழியையுடைய, 'மாதோட்டம்' என்னும் நல்ல நகரத்தின்கண் உள்ள, சிறகுகள் பொருந்திய வண்டுகள் யாழிசைபோலும் இசையை உண்டாக்குகின்ற சோலைகளையுடைய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது அடிக்குத் தொண்டனாகி, வேதத்தைச் சொல்லுகின்ற, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய, குறைதல் இல்லாத இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட, கொடியனவாகிய வினைகள் வந்து பொருந்தமாட்டா.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.080.திருக்கேதீச்சரம் , கரைமேல், திருக்கேதீச்சரத்தில், கேதீச்சரத், காணப்படுகின்றான், தானே, பாலாவியின், நல்ல, மாதோட்டம், மாதோட்டநன், பெருமான், என்னும், எழுந்தருளியிருக்கின்ற, நகரத்தில், பாலாவி, னகரில், சூழ்ந்த, யாற்றின், கடல், நிறைந்த, ஒருத்தியோடு, திருமுறை, சோலைகளையுடைய, தருளி, வண்டுகள், யார்மேலொழித், கின்றகடல், மடவாளொடு, பாலாவியாற்றின், திருக்கேதீச்சரம், பொருந்திய, மேலனவாய், அடியார்கள், தேவாரப், நோய்கள்ளடி, பதிகங்கள், உடம்பிற், நோய்களை, ஒழித்துநின்று, ஏழாம், வந்து, முற்ற, உள்ள, உண்டாக்குகின்ற, தனது, பொருந்துகின்ற, னகருள், பங்கஞ்செய்த, செய்த, கண்டத்தை, பாம்பு, போலும், வங்கம்மலி, சொல்லுகின்ற, ஆகிய, சிவந்த, மங்கை, திருச்சிற்றம்பலம், யானையுரி, யானையினது, இசையை