ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.084.திருச்செங்காட்டங்குடி
6.084.திருச்செங்காட்டங்குடி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர்.
தேவியார் - திருக்குழல்மாதம்மை.
2918 | பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப் இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல் அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச் |
6.084.1 |
பெருமையாம் தன்மை உடையானும், பெறற்கு அரிய மாணிக்கம் போன்றவனும், விரும்பி நினைந்தவாறே துயிலெழு வார் மனத்தில் நிலைபெற்றுநின்ற மணிவிளக்கு ஆனவனும், நீர்நிலை யில் தாள்மேல் நின்ற தாமரை மலரில் எழுந்தருளியிருந்தவனும், எட்டுத்தோள்களையும் வீசி உலகத்தைத தொழிற்படுத்தும் அரிய ஆற்றல் மிக்க பெரிய கூத்தினை இயற்றும் பெருமானும், அழகிய கனகக் குன்று போல்வானும், பண்டு ஆலின் கீழ் நால்வர்க்கும் திருந்திய மறைப்பொருளை உபதேசித்து அருள்செய்தானும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன்.
2919 | துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித் அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும் மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் தன்னைச் |
6.084.2 |
உயர்ந்த நகத்தாலன்றிப் பிற கருவிகளால் அழியாதவனும் தன் ஆற்றலால் பலரையும் வென்று கூட்டிய வெற்றிகளை உடையவனும் ஆகிய இரணியனை மார்பைப பிளந்தவனும், அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்தவனும் ஆகிய திருமாலும், நான்முகனும் தேடும் அணுகுதற்கரிய நெருப்புப் பிழம்பானவனும், மன்மதன் உடல்எரிந்து சாம்பராய் உருக்குலைந்து மங்கவும் அவன் மனைவி இரதி அவனைப் பெற்றுநகுமாறு செய்யவல்ல அமுதம் ஆனவனும், வளவிய கயிலை மாமலைமேல் நிலைத்து நின்றவனும், செம்பொன் நிறங்கொண்டு திரண்ட தோள்களைப் பெற்றசெல்வனும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன்.
2920 | உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப் முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும் திருகுகுழல் உமைநங்கை பங்கன் தன்னைச் |
6.084.3 |
நினைந்துருகும் அடியாருடைய மனத்தில் ஊற்றெடுக்கும் தேன் ஆனவனும், தேவர்களுடைய மணிகள் இழைத்த மகுடங்களுக்கு அணியாய் நிற்கும் திருவடிகளை உடையவனும், உண்மைக் கண்ணே நின்றாராய் உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களை ஏற்றுப் பெருகுநிலையாகிய வீடு அடைதலையே குறிக்கோளாய்க் கொண்டவருடைய அறிவாய் விளங்குபவனும், தன்னை விரும்பித் தொழும் அந்தணருக்கு விளங்கித் தோன்றும் மறைப் பொருள் ஆனவனும், பிற்படுவோராம் மணங்கமழும் தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும முற்பட்ட பரமகாரணன் ஆனவனும், மெய்யான தவத்தைச் செய்வார்க்கு அமைந்த உறுதுணைவனும், சுருண்ட குழலினையுடைய உமைநங்கைக்கு வாய்த்த பங்கனும் ஆகியசிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன்.
2921 | கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னைக் சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச் பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச் |
6.084.4 |
மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பொன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒருபாகத்தொடு தன் பாகம் விளங்கு பவனும், இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும், நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்தஇலக்கண
2922 | நஞ்சடைந்த கண்டத்து நாதன் தன்னை வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி செஞ்சினத்த திரிசூலப் படையான் தன்னைச் |
6.084.5 |
நஞ்சுபொருந்திய கண்டத்தை உடைய தலைவனும் குளிர்ந்த மலர்களாகிய அழகிய அம்புகளைக் கொண்ட மன்மதன் அழியுமாறு கொடிய சினமாகிய நெருப்பு எழவிழித்த ஒரு நெற்றிக் கண்ணினனும், கெடில நதிக்கரையில் விளங்கும் பரந்த அதிகை வீரட்டம் மேவினவனும், மேகம் தவழும் நீண்ட சோலைகளை உடையதும் மாடவீதிகள் நிறைந்ததும் மதிலால் வளைப்புண்டது மாகிய ஆரூரைத் தனது இடமாகக் கொண்ட மைந்தனும், சினத்தால் சிவந்து தோன்றும் திரிசூலப் படையினனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியிற் கண்டேன்.
2923 | கன்னியையங் கொருசடையிற் கரந்தான் தன்னைக் பொன்னிசூழ ஐயாற்றெம் புனிதன் தன்னைப் பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் தன்னைப் சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச் |
6.084.6 |
கங்கையைத் தன் ஒப்பற்ற சடையின் ஒரு பால் மறைத்தவனும், கடவூர்வீரட்டானத்தைச் சிறந்த இடமாகக் கருதினவனும், காவிரி சூழும் ஐயாற்றில்விளங்கும் எம் புனிதனும், பூந்துருத்தி நெய்த்தானம் ஆகிய பதிகளில்நிலைபெற்றவனும், தான் உரைத்த நான்மறைகளின் பொருளைத் தக்கவர்க்குவிளங்க விரித்து உரைக்கும் இயல்பினனும், தேவர்கள் அன்பு கொண்டுவணங்கிப் புகழ்ந்து 'பரனே' என்று முழங்கித் தம் தலைமீது அணியாகச் சூடிக்கொள்ளும் சிவந்த அடிகளை உடையவனும் ஆகிய சிவபெருமானை நான்செங்காட்டங்குடியில் கண்டேன்.
2924 | எத்திக்கு மாய்நின்ற இறைவன் தன்னை பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற் பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப் தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச் |
6.084.7 |
எல்லாத் திக்குகளுமாய் நின்ற இறைவனும், ஏகம்பத்தில் பொருந்திநிற் பவனும், தெய்வத்தன்மை இல்லாத ஒன்றைத் தெய்வமாக மனத்துட் கொண்டுதம் மயிரைப் பறிக்கும் சமணருடைய பொய் ஒழுக்கப் படுகுழியில் நான்புக் கழுந்தி வீழாமல், தன் திருவடியாகிய கரையில் புகும்படி என்னைஎடுத்துப் பத்திக்குரிய வழியைக் காட்டிப் பாவத்தைத் தீர்த்து பழைய வினைப் பயனாகவிளைவன எல்லாவற்றையும் விலக்கி என் மனத்துள்ளே ஊறுந்தேனாய்த் தித்திப்பவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங் குடியில் கண்டேன்.
2925 | கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக் பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும் நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச் |
6.084.8 |
உண்மை நூல்களைக் கல்லாதார் மனத்தை அணுகாது அகலும் கடவுளும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள் ஆராய்ந்து அடையும் அன்பனும், பிறர்க்குத் துன்பமிழைத்தலாகிய பிழைபட்ட நெறியை விரும்பினவருடைய புரங்கள் மூன்றும் அழிந்து விழுமாறு போர் செய்யவல்ல அம்பினைத் தொடுத்தவனும் நிலையற்ற புலாற்குடிலாகிய உடலிடத்து நரைதிரைமூப்புப் பிணி இறப்பு முதலியவற்றால் நிகழும் மாறுபாடு நீங்க நலங்கள் நிறைவதற்குரிய தவத்தை என்பால் செய்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லாத செவ்விய நெறியிலே என்னைச் செலுத்து பவனும் ஆகிய சிவபெருமானைநான் செங்காட்டங்குடியில் கண்டேன்.
2926 | அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக் உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட் தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச் |
6.084.9 |
கிடைத்தற்கரிய பெரும்பொருளாய்த் திகழ்பவனும், அலையை உடையகடலிடத்துத் தோன்றிய ஆலால நஞ்சினை உண்ணக் கழிந்த கண்டத்தினனும், சிவந்த கண்களையுடைய இடபத்தின் மேலேறி ஒளிவிடும் சிறந்த மாணிக்க மணிபோல் விளங்குந் தோற்றத்தை உடையவனும், தத்தம் நிலைக்கு ஏற்ற தொண்டினைச் செய்யும் அடியார்க்கு உலகங்களைக் கற்பம் முடியுமளவும் ஆள அளிப்பவனும், அழிவில்லாதவனும், உமையம்மை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன்.
2927 | போரரவ மால்விடையொன் றூர்தி யானைப் நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள் பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப் சீரரவக் கழலானைச் செல்வன் தன்னைச் |
6.084.10 |
போரிடத்து எழுப்பும் ஒலியையுடையதும் பெருமை மிக்கதும் ஆகிய ஒரு விடையை ஊர்தியாக உடையவனும், புறம்பயத்தும் புகலூரிலும் நிலைத்து நின்றவனும், கங்கையும், பாம்பும் நிலவும் செஞ்சடைமேல் நிலாக்காலும் வெண்டிங்கட்பிறையை என்றும் நீங்காதவாறு வைத்தவனும், நிமலனும், மிக்க ஒலியுடைய புட்பக விமானத்தையுடையவனாய், வெற்றியால் மூவுலகங்களிலும் விளங்கிய புகழுடைய கொடிகள் அரக்கனாகிய இராவணனுடைய முடிகள் பொடியாகும்படி ஒலிக்கும் அழகிய கழலினனும், செல்வனும் ஆகிய சிவபெருமானை நான்செங்காட்டங்குடியில் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.084.திருச்செங்காட்டங்குடி , கண்டேன், ஆகிய, குடியதனிற், நானே, ஆனவனும், நான், தன்னைச்செங்காட்டங், அழகிய, செங்காட்டங்குடியில், உடையவனும், சிவபெருமானை, திருமுறை, பவனும், திருச்செங்காட்டங்குடி, சிறந்த, நின்ற, விளங்கும், இடமாகக், கொண்ட, திரிசூலப், பழைய, நெய்த்தானம், வீரட்டம், னானைச்செங்காட்டங், புரங்கள், செய்யும், செஞ்சடைமேல், கல்லாதார், மனத்துள்ளே, மணிபிறங்கு, சிவந்த, நான்செங்காட்டங்குடியில், பரனே, தோன்றும், பதிகங்கள், தேவாரப், திருமாலும், சிவபெருமானைச், திருச்சிற்றம்பலம், மனத்தில், தாமரை, மிக்க, மாமலைமேல், மன்னி, நிலைத்து, உண்மை, அரிய, செய்யவல்ல, மன்மதன், செல்வன், ஆறாம், மணங்கமழும்