ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.083.திருப்பாசூர்
6.083.திருப்பாசூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்.
தேவியார் - பசுபதிநாயகியம்மை.
2908 | விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக் பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய |
6.083.1 |
பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை மேகமாகவும், நிலனாகவும், ஆகாயமாகவும்,கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணாகவும், எழுத்தாகவும், தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும், ஏழுலகத்தாரும் வணங்கித்துதித்துக் காணுதற்கமைந்த கண்ணாகவும் அக்கண்ணுள் மணியாகவும் அதனால் காணப்படுகின்ற காட்சியாகவும், அடியார்கள் விரும்பித் துதித்தற்குரிய பண் நிறைந்த பாடலாகவும், இன்னமுது ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2909 | வேதமோர் நான்காய்ஆ றங்க மாகி கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக் காதலால் வானவர்கள் போற்றி யென்று பாதியோர் மாதினனைப் பாசூர் மேய |
6.083.2 |
பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை நான்கு வேதங்கள் ஆகவும், அங்கங்கள் ஆறுஆகவும், பெருகிவளர்கின்ற பொருள்களுக்கெல்லாம் அடியான வித்து ஆகவும்,விடாது தூற்றம் சிறு திவலைகளைப் பொழியும் மாரியாகவும், உலகங்கள் யாவும் ஆகவும், கீழ்க்காற்று ஆகவும், அன்பு மேலீட்டால் தேவர்கள் 'போற்றி' என்று உரைத்து மணமலர்களைத் தூவித் தோத்திரிக்க நின்ற மாதொருபாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2910 | தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த் கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக் குடமுழவச் சரிவழியே அனல்கை யேந்திக் படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய |
6.083.3 |
பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை பெரிய ஏழு குலமலைகள் ஆகவும், காற்றாகவும்,தீ ஆகவும், குளிர்ந்த விசும்பாகவும், குளிர் விசும்பின் உச்சி ஆகவும், கடல்வட்டம் சூழ்ந்ததொரு ஞாலம் ஆகவும், காண்பதற்குத் துணை நிற்கும் கதிரவன் ஆகவும், வீடடைதற்குரிய வழியாகவும், குடமுழவு சச்சரி இவற்றின் முழக்கிற்கு ஏற்ப அனலைக் கையில் ஏந்திக் கூத்தாடவல்ல அழகன் ஆகவும், படமெடுத்தாடும் பாம்பொன்றினை ஆட்டுவான் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2911 | நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை சீராரும் மறையோதி யுலக முய்யச் காராருங் கண்டனைக் கச்சி மேய பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் |
6.083.4 |
பாரிடத்து மக்களும் விண்ணிடத்துத் தேவரும் புகழும் பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை கங்கை பொருந்திய செஞ்சடை மேல் பாம்பு, கொன்றை, அழகுநிறைந்த பிறைமதி. ஆகியவற்றைச் சூடியவன் ஆகவும், சிறப்புமிக்க மறைகளை, அறத்தின் வழி உலகம் ஒழுக ஓதியருளியவன் ஆகவும், வளவிய கடலைக் கடைந்த பொழுது எழுந்த கடல் அளவு கொடுமை மிக்க நஞ்சினை உண்டதனால் கருமை பொருந்திய கண்டனாகவும், கச்சி நகரில் விளங்கும் கண்ணுதலாகவும், கடலை அடுத்துள்ள ஒற்றியூரை உயர்வாக மதிப்பவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2912 | வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான் கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக் ஆடினார் பெருங்கூத்துக் காளி காண பாடினார் நால்வேதம் பாசூர் மேய |
6.083.5 |
பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் விசயனது மருட்கையைக் காண வேண்டி உமையவளும் வேட்டுவக்கோலம் கொள்ளத்தாமும் ஒரு வேடனாய் வில்லை ஏந்திக் கொலையிற் பழகிய பகழியையும் வில்லிற்கோத்துக் கொம்பினையுடைய பன்றியைத் தொடர்ந்து சென்று கொடிய பூசலைச் செய்தவர் ஆகவும், காளி காணப் பெருங்கூத்தினை ஆடினார் ஆகவும், அரிய மறைவாகிய பொருளையுடைய வேதங்களையும் ஆறங்கப் பொருளையும் ஆராய்ந்து மனத்திற்கொண்டு நான்கு வேதங்களையும் பாடினவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2913 | புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால் சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச் வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய |
6.083.6 |
பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரைப் பெற்ற ஞானத்தினால் உயர் சிலந்தி தன்வாயிலிருந்து வரும் நூலால் மக்களால் செய்யலாகாத பந்தலை இயற்றி அதனைச சருகால் மூடிய திருத்தொண்டைச் சிந்தித்துச் செய்தமையால் பின் அரசனாகி நிலவுலகை ஆண்டு அப்பிறப்பிலும் சிறந்த தொண்டு செய்யச் சிவகணங்களுள் புக்கு இன்புறுமாறு சேர்த்தருளினவர் ஆகவும், வலிமையும், திறமையும் கொண்டு வெள்ளானை, செய்த செயலிடத்து மிக்க அன்பு விரவியிருந்தமை கண்டு அதற்கு வீடு அருளியவர் ஆகவும், பத்தர்களுக்கு இன்னமுதம் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்றாம்.
2914 | இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார் அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர் தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித் பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய |
6.083.7 |
பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரைத் தமக்குத் தாம் அல்லால் இணையாவார் ஒருவரும் இல்லார் ஆகவும், இடை மருது, ஏகம்பம் என்றிவற்றை என்றும் நீங்காதார் ஆகவும், யாவர்க்கும் அணைவதற்கு அரியார் ஆகவும், ஆதி தேவர் ஆகவும், அடியார்க்கு அரிய அமுதம் போன்ற நல்லன எல்லாம் ஈவார் ஆகவும், நெருப்பில் மூழ்கினமையால் உண்டான சாம்பற்பூச்சைக் கொண்ட செவ்வானன்னமேனித் தத்துவன் ஆகவும், சந்தனம் அகில் ஆகியவற்றின் சேறு தோயப்பெற்றபருத்த தனத்தினையுடைய பார்வதியின் பாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2915 | அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய |
6.083.8 |
பாசூரிற் பொருந்திய எம் பரஞ்சுடரை மேலுலகத்தார் கடலைக் கடைய அதனிடத்து அனைவரையும் நடுங்கச்செய்து எழுந்த ஆலால நஞ்சு கடல் சூழ்ந்த உலகை எட்டுத் திசைகளிலும் சுடுகின்ற தன்மையைக்கண்டு இமைப்பளவில் அதனை உண்டு அதனால் கறுத்த கண்டர் ஆகவும், தேவர்களும் அசுரர்களும் வண்டுகள் மொய்க்கும் தேன் நிறைந்த மலர்களைத் தூவி நின்று வணங்கித் துதிக்கும் பண்டரங்கக் கூத்தனாம் வேடம் கொண்டவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2916 | ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத் காலத்தா லுதைசெய்து காதல் செய்த பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய |
6.083.9 |
பாசூரிற்பொருந்திய பரஞ்சுடரை ஞாலத்தை உண்ட திருமாலும் நான்முகனும் அறியாத நிலையினை உடையவராகவும், அந்தகாசுரன் மடிய அவனைச் சூலத்தாற் குத்தியவர் ஆகவும், பழைய இவ்வுலகில் பல்லுயிரையும் கொல்லும் இயமனைக் காலால் உதைத்து உருட்டித் தன்பால் உண்மை அன்பு கொண்ட அந்தணனைக் கைக்கொண்டு காத்த செவ்வான் அன்னமேனி நிறத்தவர் ஆகவும், பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
2917 | வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான் சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத் ஏந்துதிரள் திண்டோளுந் தலைகள் பத்தும் பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய |
6.083.10 |
பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரை நெடிய முடியை அணிந்த அரக்கர்கோமானாகிய வேந்தன் விரைந்து ஓடிச் சந்தனம் ஒப்பத்திருநீற்றினைஅணிந்த தனது கயிலை மலையைப் பெரிய கைகளால் பெயர்த்திடவும் மெல்லியல் உமைவெருவ, அவ்வளவில், அவனுடைய வலிமை மிக்கு உயர்ந்து திரண்ட தோள்களும் பத்துத்தலைகளும் இறும் வண்ணம் தன் தாள் விரலை ஊன்றிப் பின் அவனது இசையைக் கேட்டு இரக்கங்கொண்டவன் ஆகவும் சடையாலாகிய முடியிடத்துப் பாம்பை அணிந்தவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.083.திருப்பாசூர் , ஆகவும், கண்டு, பொருந்திய, உய்ந்த, வாறே, கண்டடியேன், பாசூரிற், அடியேன், மேயபரஞ்சுடரைக், உய்ந்தவாறு, பாசூர், நன்று, பரஞ்சுடரை, கொண்ட, திருமுறை, அன்பு, கடல், திருப்பாசூர், வெள்ளானை, பின், யாவர்க்கும், சருகால், நூலால், காளி, வேதங்களையும், சந்தனம், அரிய, கண்டர், செவ்வான், உமைவெருவ, கயிலை, அறியாத, ஞாலத்தை, வேடனாய், தூவி, சுடுகின்ற, எழுந்த, பதிகங்கள், போற்றி, நான்கு, வித்து, திருச்சிற்றம்பலம், நிறைந்த, சூழ்ந்த, தேவாரப், ஆறாம், கச்சி, கடலைக், அதனால், கொன்றை, ஏந்திக், சூழ்ந்ததொரு, பெரிய, மிக்க