ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.064.திருவேகம்பம்
6.064.திருவேகம்பம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
2725 | கூற்றுவன்காண் கூற்றுவனைக்குமைத்த கோன்காண் காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.1 |
உலகை அழிப்பவனாய், கூற்றுவனை அழித்த தலைவனாய், உலக காரணனாய், உலகில் நீரும் காற்றும் கனலும் ஒலிக்கின்ற மேகமும் அதன் மின்னலுமாகி, பவளச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்து, பிறைதவழும் சென்னியனாய், கங்கை வெள்ளத்தை நிமிர்ந்த சடைமேல் ஏற்றவனாய், அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கச்சி ஏகம்பத்திலுள்ள பெருமான் என் எண்ணத்தின்கண் ஆயினான்.
2726 | பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும் துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண் மருந்தவன்காண் வையகங்கள் பொறைதீர்ப் பான்காண் திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.2 |
பல உயிர்களாகி எங்கும் பரந்தவனாய், தன்னை வழிபட்டு எழுபவருடைய பாவங்களையும் வினைகளையும் போக்கியவனாய், தூய பூக்களாலாகிய முடிமாலையை உடையவனாய், உலகைப்படைத்துக் காத்து அழிக்கும் பொருளாய் அமைந்த அமுதமாய், உலகங்களின் பாரத்தைப் போக்குபவனாய், மலர்களைத் திருவடிகளில் சேர்த்து, விருப்புற்று நினைத்து வழிபடுபவர்களுடைய உள்ளத்தை விடுத்து நீங்காது இருப்பவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.
2727 | நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண் தோற்றவன்காண் தோற்றக் கேடில்லா தான்காண் போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண் ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.3 |
திருநீறு அணிந்தவனாய், நீரும் தீயும் ஆனவனாய், கனமான மழுப்படை உடுக்கை அக்கினி இவற்றைக் கைகளில் ஏந்தியவனாய்த் தனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாய், ஒப்பற்றவனாய், தன்னைத் துணையாகக் கொண்டு தொழும் அடியவர்களுடைய உள்ளத்தைப் பாதுகாப்பவனாய், புகழ்கள் படைத்தவனாய், விரிந்த சடைமீது புள்ளிகளை உடைய பாம்பினையும் கங்கையையும் ஏற்றவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.
2728 | தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண் சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத் ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.4 |
உலகிற்குத் தாயாய், தன்னொப்பார் இல்லாத தத்துவனாய்; பார்வதி பாகனாய், அடியவர்கள் வாக்கில் இருப்பவனாய், இனி வரக்கூடிய பிறவி நோயைத் தீர்ப்பானாய், உலகியலிலேயே ஈடுபடும் தன்னை நினையாத தேவர் தானவர் மக்கள் ஆகியோருக்குத் தூரத்திலுள்ளவனாய், மனமாரத் திருவடியை விரும்பித் தியானித்து எழுபவர் உள்ளத்தில் பொருந்தியவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.
2729 | அடுத்தானை யுரித்தான்காண் * * |
6.064.5 |
தன்னைக் கொல்ல நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவன்.
2730 | அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால் பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.6 |
கூரிய வாயை உடைய அம்பினாலே மும்மதிலையும் அழித்தவனாய், ஐயாறும், இடைமருதும் ஆள்பவனாய், பகைவரைப் பழித்தவனாய், அடியார்களுக்குத் துணையாய் இருப்பவனாய், பாம்பினை வில் நாணாகக் கொண்டவனாய், தலையில் கங்கையைச் சுழன்று தங்கச் செய்தவனாய், தன் திருவடிகளை வழிபட்ட பகீரதனுக்காக உலகில் ஒடுமாறு கங்கை நீரைச் சிறிது இறக்கியவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆரும் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.
2731 | அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் தான்காண் இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.7 |
பாடலை விரும்பி, உடல் அசைந்து கூத்து நிகழ்த்தியவனாய், தன் தீப்பிழம்பாகிய வடிவில் அடியும், முடியும், மாலும் அயனும் தேட, அவர்களுக்கு இரங்கியவனாய், பேய்க் கூட்டங்கள் முன் நின்று துதித்துப் புகழும் இயல்பினனாய், தன்னை முன் நின்று துதித்துத் தியானிப்பவர்பால் மனம் இளகியவனாய், யானைத் தோலைப் போர்த்தவனாய், கடலின் விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதம் ஈய மனம் பொருந்தியவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2732 | முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண் முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண் இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.8 |
கொடிய கூற்றுவனை அழித்தவனாய், தன் கோபத்தீயினால், வலிய பகைவர்களின் மும்மதில்களும் தீயில் வெந்து அழியுமாறு, வில்லை ஏந்தியவனாய், தலைக்கோலம் அணிந்த வேடத்தானாய், நறுமணம் கமழும் கொன்றை மாலையையும், பாம்பையும் தலையில் அணிந்தவனாய், முத்தலைச் சூலத்தை உடையவனாய், மழையாய் மின்னி இடித்தவனாய், உள்ள எழிலாகும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2733 | வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம் பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் தான்காண் இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.9 |
தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய், அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய், தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய், நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய், பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி, ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2734 | வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண் விம்மாநின் றழுவார்கட் களிப்பான் தான்காண் தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண் எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.10 |
'கொடிய பெருமை மிக்க புலித்தோலைப் போர்த்தி, வேதத்தின் பொருளாய், எம் இறைவன் உள்ளான்' என்று சொல்லி, மிடறு தழுதழுத்து, அழும் அடியவர்களுக்கு அருள் வழங்கு பவனாய், காளையை இவர்ந்து திரிபவனாய், கூத்தாடும் பூதங்களின் தலைவனாய், உலகங்களைத் தாங்கும் அற்புதனாய், சொல்லின் அளவைக் கடந்து நின்ற புகழை உடைய எம் தலைவனாய், எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2735 | அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் தான்காண் பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.064.11 |
பிரமன் தலை ஒன்றை அறுத்தவனாய், தேவர் வேண்ட ஆழ்ந்த கடலின் விடத்தை உண்டு, கங்கையைச் சடையில் அடக்கியவனாய், தேவர்களுக்கும் தேவனாய், எண்திசையும் தொழுது வணங்குமாறு கலைமானைக் கையில் தாங்கியவனாய், தன் இருப்பிடமாகிய கயிலை மலையை அசைக்கவந்து, அதனைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நசுக்கியவனான, எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.064.திருவேகம்பம் , பொழிலார், எழிலாரும், கச்சி, கச்சிஏகம்பன், எண்ணத், தானே, ஆரும், பொழில், ஏகம்பன், எழில், காண்அவன்என், உள்ள, எண்ணத்தானே, தன்னை, எண்ணத்தான், உடைய, மனம், திருமுறை, பொருளாய், உடையவனாய், இருப்பவனாய், அவன்என், திருவேகம்பம், தலைவனாய், காண், நின்று, ஆறாம், முன், கங்கையைச், தலையில், கடலின், கடந்து, உண்டு, கொடிய, கையில், அழித்தவனாய், விடத்தை, மழையாய், தேவர், உலகில், கூற்றுவனை, விருப்புற்று, நீரும், கங்கை, திருச்சிற்றம்பலம், அணிந்தவனாய், ஏற்றவனாய், பொருந்தியவனாய், தேவாரப், உலகிற்குத், பதிகங்கள், இடைமருதும்