ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.063.திருவானைக்கா
6.063.திருவானைக்கா
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
2715 | முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை தன்னானை யாப்பண்ணி யேறி னானைச் என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச் |
6.063.1 |
முன் ஒரு காலத்தில் யானையைக் கொன்று, அதன் தோலைப் போர்த்தியவனாய், ஞானம் மிகப் பெறாத அடியேனுடைய சிந்தை மனம் வாக்கு இவற்றைத்தான் இவரும் யானைகளாகக் கொண்டு இவர்ந்தானாய், அடியார்க்கு அல்லது மற்றவருக்குக் கிட்டுதற்கு அரியனாய், எல்லோருக்கும் தந்தையாய், என் ஆனைக்கன்று போன்று எனக்கு இனியவனாய், என்னை அடக்கி ஆள்பவனாய், அலைகள் மோதும் காவிரியை அடுத்த அழகிய ஆனைக்காவில் தேனாகவும் பாலாகவும் இனியனாய், நீர்த்திரள் வடிவாக அமைந்த பெருமானை நான் தலைப்பட்டேன்.
2716 | மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக் திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.2 |
அமுதமாக உள்ளவனாய், தியானிப்பவர் மனத்து இருப்பவனாய், பிறையை அணிந்த சடையனாய், மகிழ்ந்து என் உள்ளத்து இருப்பானாய், பிறப்பு இறப்பு இல்லாதவனாய், தேவர்கள் தலைவனாய், பார்வதி அஞ்சுமாறு கரிய மத நீரை உடைய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனாய், வலிய மழுப்படையை உடையவனாய், ஊர் ஊராய்ப் பிச்சை எடுத்துத் திரிவானாய்த் திருவானைக்காவில் உள்ள நீர்த்திரள்' வடிவாக அமைந்த பெருமானைத் தலைப்பட்டேன்.
2717 | முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப் செற்றானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.3 |
பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்க்கு அமுதம் வழங்கும் உறவினனாய், பல உயிர்களுக்கும் துணையாவானாய், ஓங்காரத்தின் உட்பொருளாய், உலகங்களை எல்லாம் தோற்றுவித்துப்பின் ஒடுக்குபவனாய்த் தன்னைத் தலைவன் என்று போற்றாத அசுரர்களின் முப்புரங்களையும் அழித்தவனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே.
2718 | காராருங் கறைமிடற்றெம் பெருமான் தன்னைக் தாரானைப் புலியதளி னாடை யானைத் பேரானை மணியார மார்பி னானைப் தேரானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.4 |
கருமை நிறைந்த நீலகண்டனாய்க் காதில் வெண்ணிறக்குழையை அணிந்தவனாய், நறுமணம் கமழும் கொன்றைப் பூ மாலையனாய், புலித்தோலை ஆடையாக அணிந்தவனாய், ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவனாய், படிகமணிமாலையை மார்பில் அணிபவனாய், உலகங்களை அழிப்பவனாய், தெய்வத் தன்மை பொருந்திய நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவனாய், திருவானைக்காவில் உறைபவனாய், உள்ள செழு நீர்த்திரளைச் சென்று ஆடினேனே.
2719 | பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப் எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை கையானைக் கங்காள வேடத் தானைக் செய்யானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.5 |
பொய்க்கலப்பற்ற மெய்ம்மை வடிவினனாய், புண்ணியனாய், பகைவர் மும்மதில்களும் சாம்பலாகுமாறு அம்பு செலுத்தியவனாய், தவத்தில் மேம்பட்டவனாய், காளை வாகனனாய், மானை ஏந்தும் இடக்கையனாய், கங்காள வேடத்தானாய், கட்டங்கம் என்ற படையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனாய், தீயைப்போன்று சிவந்த மேனியனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.
2720 | கலையானைப் பரசுதர பாணி யானைக் மலையானை யென்தலையி னுச்சி யானை நிலையானை வரியரவு நாணாக் கோத்து சிலையானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.6 |
கலையையும், மழுப்படையையும் ஏந்திய கைகளை உடையவனாய், பெரிய வயிரத்திரளாய், மாணிக்கமலையாய், என் தலையின்மேல் உள்ளானாய், நீண்ட செஞ்சடையனாய், சுடுகாட்டில் நிலையாக இருப்பவனாய், வாசுகி என்ற பாம்பை நாணாகக் கோத்து, தன்னை விருப்புற்று நினையாத அசுரர்களின் மும்மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு, வளைக்கப்பட்ட மேருமலையாகிய வில்லினை உடையவனாய், திருவானைக்காவில், உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே.
2721 | ஆதியனை யெறிமணியி னோசை யானை சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச் வேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை சேதியனைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.7 |
எல்லோருக்கும் முற்பட்டவனாய், மணியின் ஓசை போல எங்கும் பரந்தவனாய், உலகில் உள்ளவரால் அறிய முடியாதபடி உலகுக்கு அப்பாலும் பரவிய சோதி வடிவினனாய், வேதத்தின் விழுமிய பொருளாய், வண்டுகள் தங்கும் கொன்றை மலர், எல்லோருக்கும் முற்படத் தான் பூண்ட பூணூல் இவற்றால் விளங்கும் வேதியனாய், அறத்தை உபதேசித்த ஆசிரியனாய், தாமரையில் விளங்கும் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை நீக்கியவனாய், திருவானைக்காவில் உறைபவனாய், உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.
2722 | மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப் உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.8 |
கச்சி ஏகம்பத்தை விரும்பி உறைபவனாய், தன் திருவடிகளை மறவாது விருப்புற்று நினைத்து வாழ்த்தி உயர்த்திப் புகழ்ந்த அடியவர்களைப் பொன்னுலகு எனப்படும் தேவர் உலகை ஆளச் செய்பவனாய், பூதகணமாகிய படையை உடையவனாய், சுடு காட்டில் கூத்தாடுதலை விரும்புபவனாய், பிச்சை ஏற்றலை ஆசைப்படுபவனாய், பவளத்திரள்போல என் உள்ளத்தில் விளங்குபவனாய், திருவானைக்காவுள் உறைபவனாய், உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.
2723 | நசையானை நால்வேதத் தப்பா லானை இசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும் திசையானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.9 |
எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனாய், நான்கு வேதங்களுக்கும் அப்பாற்பட்டவனாய், வறுமை மனநோய்கள் உடல்நோய்கள் ஆகியவற்றை நீக்குபவனாய்ப் புகழுக்கு உரியவனாய், எல்லையற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமாயவனாய், இடை மருதும் ஈங்கோயும் உறைவிடமாக உடையவனாய், காளைவாகனனாய், விரிந்த கடலும் ஐம்பூதங்களும் எட்டுத் திசைகளும் ஆகியவனாய், திருவானைக்காவுள் உறைவானாய், உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.
2724 | பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப் சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத் ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச் |
6.063.10 |
மன்மதன் உடல் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவனாய், ஒருகாலத்தில் பிரமன் திருமால் இருவரும் தன்னை முடி அடி அறிய முடியாதவாறு தீப்பிழம்பாய் நின்றவனாய், தேவர்கள் தலைவனாய், தன்னுடைய வலிமையை நினைத்துப்பாராமல் ஆரவாரித்து ஓடிவந்து, கயிலை மலையை எடுத்த இராவணனுடைய ஆற்றலைப் போக்கிப்பின் அவன் துயரை அப்பொழுதே தீர்த்தானாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 6.063.திருவானைக்கா , திரளைச்சென், னேனே, ளானைச்செழுநீர்த், காவு, திருவானைக், றாடி, உள்ள, ஆடினேனே, சென்று, உடையவனாய், உறைபவனாய், திருவானைக்காவுள், திருவானைக்காவில், செழுநீர்த்திரளைச், அணிந்தவனாய், திருமுறை, பெருமானை, திருவானைக்கா, சாம்பலாகுமாறு, எல்லோருக்கும், விளங்கும், அறிய, வாழ்த்தி, உரியவனாய், அசுரர்களின், ஈங்கோயும், விருப்புற்று, திரளைச், பொருளாய், நான்கு, கங்காள, வடிவினனாய், மும்மதில்களும், உலகங்களை, தன்னை, செழுநீர்த், தேவர்கள், கொன்று, தோலைப், போர்த்தியவனாய், நீர்த்திரள், யானையைக், திருச்சிற்றம்பலம், ஆறாம், தேவாரப், பதிகங்கள், வடிவாக, அமைந்த, இருப்பவனாய், பிறையை, தலைவனாய், பிச்சை, உள்ளவனாய், படையானைப், தலைப்பட்டேன், மனத்து, சடையானை, பெருமானைத்